ஊர் பெரியவர், ’ஆட்டை திருடியவன் இந்தக் கிராமத்தில் விற்கமாட்டான். அடுத்த கிராமத்திலும் விற்கமாட்டான். இன்று சந்தை கூடும் நாள். ஆட்டை அங்கேதான் விற்பான்’ என்று கூறினார். சிவப்பிரகாசம் ஊர் பெரியவரை அழைத்துக்கொண்டு சந்தைக்கு சென்று தேடினார். அவர் சொன்னது சரிதான். அங்கே அவருடைய ஆடு ஏற்கனவே கைமாறப்பட்டு கசாப்புக் கடைக்கு செல்வதற்கு ஆயத்தமாக நின்றது.
ஆட்டுப்பால் புட்டு
Published on May 28, 2021 11:33