பண்டிட் பன்னாலால் கோஷின் புல்லாங்குழலிசையை விரும்பிக் கேட்பேன். நிகரற்ற இசைக்கலைஞர். கிருஷ்ணகானம் என்பார்களே அது இவரது குழலில் பிறக்கிறது. எச்.எம்.வி வெளியிட்ட இவரது இசைநாடாக்களை வாங்கித் தொடர்ந்து கேட்டிருக்கிறேன்
இணையத்தில் இவரது இசை நிறைய கிடைக்கிறது. இரவில் தனிமையில் கேட்கும் போது நாம் கரைந்து போய்விடுகிறோம். ரகசிய நதியொன்று புல்லாங்குழலில் இருந்து கசிந்து பெருகுகிறது. நிலவொளியைப் போல இசை பிரகாசிக்கிறது. ஆனந்தம் என்பதன் முழுமையான அர்த்தம் இது போன்ற இசையில் தானிருக்கிறது
Pannalal Ghosh Hamsadhwani, Khamaj Thumri & Mishra Pilu
Published on May 19, 2021 23:03