கடிதங்கள்

மனத்தின் குரல்- கிருஷ்ணன் சங்கரன்

ஜெ

கட்டுரைக்கு நன்றி.

ஒரு சந்தேகம். நான் மனதின் குரல் என்றுதான் அனுப்பியிருந்தேன். நீங்கள் ‘த்’ சேர்த்ததன் காரணம் என்னவோ?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

**

அன்புள்ள கிருஷ்ணன்

மனம் என எடுத்துக்கொண்டால் மனத்தின் குரல்தான் சரி. மனது என எடுத்துக்கொண்டால் மனதின் குரல் சரி. நான் மனம் என எடுத்துக்கொண்டிருக்கலாம். நான் திருத்தியது நினைவில்லை. வெட்டி ஒட்டியபோது இயல்பாகவே திருத்தம் விழுந்திருக்கலாம்.

ஜெ

***

கதை திகழும் புள்ளிகள்- ஒரு விவாதம்

அன்புள்ள ஜெ,

இன்றைய தங்களின் ‘கதை திகழும் புள்ளிகள்’ கட்டுரையில் இந்த வரிகளை படித்தேன்.

“அதில் ஒரு பிரபஞ்சவிதி உள்ளது. அதன் தீராமர்மத்தைச் சுட்டிக்காட்டும் அரிய கதை இது. நான் தமிழில் இன்று பெருகி எழவேண்டிய கதைகள் எவை என நினைக்கிறேனோ அவ்வகைப்பட்டது.”

இந்த வரிகள் எனக்கு ஒரு பெரிய திறப்பினை அளித்தது, உங்கள் கதைகளையே மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ள அது உதவுகிறது என்று எண்ணினேன். மர்மங்களை திறக்கும் முயற்சியாகவே தங்கள் கதைகளை எழுதுகிறீர்கள் என்றே இதுவரை நம்பியிருந்தேன். அது திறக்காத/திறக்கப்படாத சமயங்களில் எனக்கு குழப்பம் எழுந்ததுண்டு.

ஆனால், மேற்சொன்ன கட்டுரை வரிகளை படித்தவுடன் “அட…! ஜெ. சொல்ல விரும்புவதும் சுட்ட விரும்புவதுமே அந்த மர்மத்தை மட்டும்தான் போல, அதை திறக்கும் சாவியை வாசகன் வைத்திருந்தால் திறந்து கொள்ளட்டும். அல்லது கிடைக்கும் வரையான தேடலில் இருக்கட்டும் என்பதே அவர் எத்தனம் போலவே…!” என்று எண்ணிக்கொண்டேன்.

என்னுடைய இந்த புரிதல் சரியா…?

அன்புடன்,

மதி

***

அன்புள்ள மதி

கதைகள் வாசகனுக்கு எதையும் சொல்வதில்லை. அவன் அகத்தில் ஏற்கனவே இருக்கும் அனுபவப்புள்ளிகளைச் சீண்டுகின்றன. அவனே ஓர் உலகைக் கற்பனைசெய்துகொள்ளச் செய்கின்றன. அவன் தேடும் விடைகள் அவனுடையவை. அவன் கண்டடைவதும் அவனுடைய அனுபவத்தின் சாரத்தையே

ஜெ

சூல்கொண்ட அருள்

அன்புள்ள ஜெ

குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் எஸ்.ஜானகி பாடியது

முத்துக்கிருஷ்ணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2021 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.