உண்ணமுத நஞ்சாகி ஒண்மதுரைச் சொக்கருக்கு என்
பெண்ணமுத நஞ்சாயோ பேதைமீர்- தண்ணிதழி
இந்தா நிலமேவெனச் சொலார் என் செய்வாள்
மந்தா நிலமே வரின்
[குமரகுருபரர்- மதுரைக் கலம்பகம். செவிலியன்னைக் கூற்று]
உண்ணும் அமுதென நஞ்சையே கொண்ட சொக்கருக்கு என் பெண் எனும் அமுதம் எப்படி நஞ்சானாள் பேதையரே? தண்ணிதழ் கொன்றையை இந்தா, நில் அம்மையே என்று சொல்லி அளிக்கமாட்டார் என்றால், தென்றலும் வருமென்றால், என்னதான் செய்வாள் அவள்
Published on April 24, 2021 11:34