வழியெங்கும் கல்லறைகள்… ராய் மாக்ஸம்


தே ர் இலையின் வரலாறு வாங்க

ராய் மாக்ஸம் எழுதிய தே [தேயிலையின் வரலாறு] சிறில் அலெக்ஸ் மொழியாக்கத்தில் வெளியாகியிருக்கிறது. அதற்கு ராய் எழுதிய சிறிய வாழ்த்துக் குறிப்பு

ஜெ 

தேயிலையின் வரலாறு கூறும் எனது புத்தகத்தை சிறில் அலெக்ஸ் தமிழில் மொழிப்பெயர்த்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். உலகளாவிய தேயிலை பயன்பாடு,  வளர்ப்பு மற்றும் தயாரிப்பு குறித்த வரலாற்றை இப்புத்தகம் பதிவு செய்கிறது. தமிழ்நாட்டில் ஒருபோதும் பெரிய அளவில் தேயிலைப் பயிரிடப்படவில்லை என்றாலும் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் இத்துணைக்கண்ட பகுதியிலிருந்த தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்துள்ளனர். உண்மையில் இவர்கள் இல்லையென்றால் சிலோனில் (ஸ்ரீ லங்கா) தேயிலைப் பயிரிடப்படுவது இருந்திருக்கும் வாய்ப்பு குறைவே.

பத்தொன்பதாம் நுற்றாண்டின் இரண்டாம் பகுதியில் விவசாயம் பொய்த்துப் போய் அதன் விளைவாக உருவாகிய பஞ்சங்கள் தமிழர்களை அபாயகரமான பயணங்களின் வழியே புதிதாக உருவாக்கப்பட்ட சிலோன் தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லத் தூண்டின. ஊரில் பட்டினிகிடந்த தன் குடும்பத்துக்குப் பணம் அனுப்ப முடியும் எனும் எதிர்நோக்குடன் இவர்கள் சென்றனர். ஆனால் இவர்களில் பலரும் பயணத்தின்போது உணவின்றி தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லும் கடுமையான பாதைகளிலேயே செத்து மடிந்தனர். பிறர் தோட்டங்களைச் சென்றடைந்தனர், உடல் சோர்ந்தும், பட்டினியில் வாடியும் வந்து சேர்ந்த அவர்கள் அங்கே தங்களுக்குப் பழக்கமே இல்லாத மலைப்பகுதிகளின் குளிரில் வாடி மடிந்தனர்.தோட்டங்களில் வீட்டுவசதிகள் பொதுவாகப் படுமோசமாகவே இருந்தன. நெருக்கமும், மோசமான சுகாதார வசதிகளும் மாசுபட்ட குடிநீரும் சேர்ந்து பலரும் காலறாவில்  மரித்தனர்.

பல தசாப்தங்கள் கடந்தபின்னர்  இலைங்கை தோட்டங்களின் நிலைமை முன்னேறியுள்ளது, ஆனால் தமிழ்நாட்டில் பல குடும்பங்களின் மூதாதையர்கள் அத்தோட்டங்களுக்கருகேயும் தோட்டங்களுக்குச் செல்லும் வழியிலும் புதைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் பல சவக்குழிகளிகளும் பெயரற்றவையே. இந்த வரலாறு இன்றையத் தமிழர்களுக்குப் வறட்சியும் பஞ்சமும் தலைவிரித்தாட பட்டினியில் வாடிய தன் குடும்பத்துக்காக தியாகங்கள் பிரிந்த முன்னோர்களைத் தெரிந்துகொள்ள உதவும் என நம்புகிறேன்.

ராய் மாக்சம்.

ராய் மாக்ஸம் – மூன்று நூல்கள்

இந்தியா சுரண்டப்பட்ட வரலாறு வாங்க

உப்புவேலி வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2021 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.