இந்த ஆண்டு [2020]க்கான சாகித்ய அக்காதமி விருது எழுத்தாளர் இமையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கோவேறு கழுதைகள்’ என்ற நாவலினூடாக தமிழ்ச்சூழலுக்கு அறிமுகமானவர் இமையம். ஓர் எழுத்தாளராக அவருடைய அறிமுகமும் அவர் பெற்ற ஏற்பும் முதன்மையாக அவர் எழுத்தின்மேல் பெருமதிப்பு கொண்டிருந்த சுந்தர ராமசாமியால் உருவாக்கப்பட்டது. ‘ஆறுமுகம்’ ‘செடல்’ ’எங்கதெ’ ஆகிய நாவல்களும் ‘மாடுகள்’ போன்ற சிறுகதைகளும் அவரால் எழுதப்பட்டுள்ளன. செல்லாத பணம் என்னும் நாவலுக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இயல்புவாத எழுத்தின் உச்சங்களில் ஒன்று இமையத்தின் எழுத்து. புகைப்படத்துல்லியத்துடன் வாழ்க்கையைப் பதிவுசெய்வது, அதனூடாக ஆழ்ந்த சமூகவியல் உசாவல்களுக்கு வாசகர்களைக் கொண்டுசெல்வது.
இமையம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Published on March 12, 2021 03:35