சிறிய வயதிலே பூணூல் போட்டால், “சந்தி” தினசரி செய்வேன் என்று என் தந்தை நினைத்து இருந்தார். முதலில் நானும் தினசரி மூன்று வேளை அதை செய்ய பழக்க பட்டு இருந்தேன். பின்னர் அது தினமும் ஒன்று, வாரம் ஒன்று, மாதம் ஒன்று என்று மாறி கொண்டே இருந்தது. இப்பொழுது எல்லாம் அவர் “ஆவணி அவிட்டதிற்கு” இரண்டு நாள் முன்னர் போன் செய்து, அன்றைக்காவது நான் சந்தி செய்ய மன்றாடுகிறார். மரபு தன்னுடன் அறு பட்டு போகும் கவலை என் தந்தைக்கு எப்பொழுதும் உண்டு
சர்வம் கண்ணன் மயம்
Published on March 09, 2021 10:30