ஆஹா, ஆஹா, முறுக்கு கிடைத்து விட்டது. ஆம், என் மனம் கவர்ந்த முறுக்கை எனக்கு ஆசை ஆசையாகத் தின்னக் கொடுக்கும் செந்தில் குமரன் சேலத்திலிருந்து சென்னை வந்து விட்டார். முறுக்கும் கொண்டு வந்திருப்பார் என்று நினைக்கிறேன். அந்த மாதிரி முறுக்கை நீங்கள் உலகத்தில் வேறு எங்கேயும் சாப்பிட்டிருக்க முடியாது. சென்னை முறுக்கெல்லாம் முறுக்கே கிடையாது. செந்தில், ஒரு முக்கிய விஷயம். பா.ராகவன் எதிரில் முறுக்கைப் பிரித்து விடாதீர்கள். அந்த ஆளும் என்னை மாதிரிதான் ஒரு சாப்பாட்டுப் பிரியன். ...
Read more
Published on March 05, 2021 20:21