அரசாங்க குமாஸ்தாக்களுக்கு ஒரு பொதுக் குணம் உண்டு. எது சொன்னாலும் யெஸ் சார் என்பார்கள். ஏய் மூளை கெட்ட் முண்டம். யெஸ் சார். நான் 22 வருஷம் குமாஸ்தாவாக இருந்திருக்கிறேன். இதில் பத்தை கழித்து விடலாம். தில்லியில் நான் பணி புரிந்த சிவில் சப்ளைஸில் இந்த குமாஸ்தாத்தனம் கிடையாது. அங்கே எல்லோருமே தனிக்காட்டு ராஜாக்கள். கொஞ்சூண்டு பணிவு எதிர்பார்ப்பார்கள். என் அதிகாரி பெயர் குல்லர். குல்லர் “ரவிஜி, கொஞ்சம் ஷர்மாவைக் கூப்பிடுங்களேன்” என்பார். உடனே நான் இண்டர்காமை ...
Read more
Published on March 05, 2021 21:11