எனது பரிந்துரைகள் -4

புத்தகக் கண்காட்சியினை முன்னிட்டு ஐம்பதுக்கும் அதிகமான புதிய கவிதைநூல்கள் வெளியாகியுள்ளதாக அறிந்தேன். ஒரு சில நூல்களை மட்டுமே காண முடிந்தது. இளங்கவிஞர்களுக்கு எனது வாழ்த்துகள்.

நேஷனல் புக் டிரஸ்ட் அரங்கில் 50 சதவீத தள்ளுபடியில் மிகச்சிறந்த நாவல்கள் கிடைக்கின்றன. இந்திய அளவில் புகழ்பெற்ற இந்த நாவல்கள் இனி மறுபதிப்பு வருமா என்பது சந்தேகமே. ஒருவேளை வந்தாலும் அதன் விலை மிக அதிகமாக இருக்கும். நூறு ரூபாயில் இரண்டு மூன்று முக்கியமான நாவல்களை இங்கே வாங்கிவிட முடியும்.

கவிதாலயம், ஏணிப்படிகள். மித்ரவந்தி, மய்யழிக்கரையில், கயிறு, ஆதவன் சிறுகதைகள், இயந்திரம், இது தான் நம் வாழ்க்கை உயிரற்ற நிலா, கங்கைத்தாய், கன்னடச்சிறுகதைகள் போன்ற நூல்கள் இங்கே கிடைக்கின்றன. இவை மிகச்சிறந்த புத்தகங்கள். குறைந்த பிரதிகளே உள்ளன. வாங்கத் தவறவிடாதீர்கள்.

சுகுமாரன் கவிதைகள்

நவீன தமிழ்கவிதையுலகில் தனித்துவமும் அபாரமான கவித்துவமும் கொண்ட மிகப் பெரும் ஆளுமை கவிஞர் சுகுமாரன். அவரது கவிதைகளின் மொத்தத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இளங்கவிஞர்கள் அவசியம் வாங்க வேண்டிய புத்தகமிது. கவிதையை நேசிக்கும் அனைவரும் வாங்கிப் படித்துப் பாதுகாக்க வேண்டிய சிறந்த நூல்.

காஃப்கா கடற்கரையில்

ஹாருகி முரகாமி

தமிழில்:  கார்த்திகைப் பாண்டியன்

எதிர் வெளியீடு

ஜப்பானிய எழுத்தாளரான ஹாருகி முரகாமியின் புகழ்பெற்ற நாவலை கார்த்திகைப் பாண்டியன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.காஃப்காவின் சிறுகதைகளை முரகாமி ஜப்பானிய மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்த நாவல் காஃப்காவின் மனநிலையை கொண்ட ஒரு கதாபாத்திரத்தின் வாழ்வினை முதன்மைப்படுத்துகிறது. எதிர் வெளியீடாக வந்துள்ளது.

வேப்பங்கிணறு

 தேனீ சீருடையான்

 அன்னம் – அகரம் பதிப்பகம்

தேனீ சீருடையான் சிறந்த நாவலாசிரியர். இவரது நிறங்களின் உலகம் தமிழில் வெளியான மிகமுக்கியமான நாவல். சீருடையானின் புதிய நாவலிது. அன்னம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கள்ளர் மடம்

மதுரை வட்டாரச் சிறப்புக் கதைகள்

சி. சு. செல்லப்பா

பதிப்பாசிரியர்: கால சுப்ரமணியம்

கருத்து=பட்டறைபதிப்பகம்

தமிழ் இலக்கியத்தின் முன்னோடி படைப்பாளி சி.சு.செல்லப்பா எழுதிய முக்கிய சிறுகதைகளின் தொகுப்பு.

ஞானக்கூத்தன் நேர்காணல்கள்

பதிப்பாசிரியர்: : திவாகர் ரங்கநாதன்

காலச்சுவடு பதிப்பகம்

கவிஞர் ஞானக்கூத்தனின் நேர்காணல்களின் தொகுப்பு. தமிழின் சங்கக் கவிதைகள் துவங்கி சமகால வாழ்க்கை வரை ஞானக்கூத்தனின் பார்வைகள் தனித்துவமானவை.

நினைவுகளின் ஊர்வலம்

எம். டி. வாசுதேவன் நாயர்

தமிழில்:  : டி. எம். ரகுராம்

சந்தியா பதிப்பகம்

ஞானபீடம் பரிசு பெற்றுள்ள மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரின் இளமைப்பருவத்தை விவரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. டி.எம். ரகுராம் ஒரு ஆங்கிலக் கவிஞர். . தமிழில் இந்த நூலை சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

மிதக்கும் உலகம்

ஜப்பானியக் கவிதைகள் | மர அச்சு ஓவியங்களுடன்

தமிழில்  ப. கல்பனா, பா. இரவிக்குமார்

பரிசல் பதிப்பகம்

தேர்வு செய்யப்பட்டஜப்பானிய கவிதைகளின் தொகுப்பு. மிக அழகான ஒவியங்களுடன் வெளியிட்டிருக்கிறார்கள். பேராசிரியர் இரவிக்குமார் மற்றும் பேராசிரியர் ப..கல்பனா இருவரும் இணைந்து கவிதைகளை சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 02, 2021 22:09
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.