புத்தகக் காட்சி துவங்கியது

இன்று காலை 44- வது சென்னை புத்தகக் காட்சி இனிதே துவங்கியது.

தேசாந்திரி பதிப்பகம் அரங்கு எண் 494 & 495ல் தயாராகிவிட்டது. எனது புதிய நூல்களையும் தேசாந்திரியின் பிற வெளியீடுகள் அனைத்தையும் இந்த அரங்கில் பெற்றுக் கொள்ளலாம்.

புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய சிறந்த நூல்கள் குறித்த பரிந்துரைகளை தினமும் வெளியிட இருக்கிறேன். அத்துடன் காணொளி மூலமாகவும் எனது பரிந்துரைகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன்.

புத்தகக் கண்காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருப்பதால் பயணம் செய்து வருவது எளிதானது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 24, 2021 03:44
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.