ஓவியம்: ஷண்முகவேல்
கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் வாயிலாக இம்மாதம் முதல் வெண்முரசு கூடுகை நிகழவுள்ளது. முதல் கூடுகையை இம்மாத இறுதி ஞாயிறன்று துவங்கவுள்ளோம்.
இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் முதல் நாவலான “முதற்கனல்“ – இன்
வேள்விமுகம்
பொற்கதவம்
எரியிதழ்
அணையாச்சிதை
மணிச்சங்கம்
எனும் ஐந்து பகுதிகளை முன்வைத்து கலந்துரையாடல் நிகழவுள்ளது. வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இக்கூடுகைக்கு வரவேற்கிறோம்.
நாள் : 31-01-21, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9:30
இடம் : தொண்டாமுத்தூர், கோவை.
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
நன்றி,
பணிவுடன்,
பூபதி துரைசாமி.
Published on January 21, 2021 08:31