ஆண்டறுதிக் கணக்கு


ஆதவன் தீட்சண்யாவின் வழக்கறிஞர் அறிவிக்கை
கி.ரா- வன்கொடுமைச்சட்டம்- நீதிமன்றத்தீர்ப்பு
முற்போக்கு மிரட்டல்- கடிதங்கள்
அவதூறுகள்,முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
வசையே அவர்களின் உரிமைப்போர்
சட்டநடவடிக்கைகள் பற்றி அறுதியாக…
சட்ட நடவடிக்கை
பா.செயப்பிரகாசம் பற்றி

அன்புள்ள ஜெ


இந்த ஆண்டு முடியப்போகிறது. இந்த ஆண்டின் சாதனைகளில் கண்டன அறிக்கையும் வழக்கறிஞர் அறிவிக்கைகளும் எல்லாம் சேர்ந்துகொண்டன. வழக்கம்போல. எல்லா ஆண்டும் கணக்கெடுக்கையில் இப்படி ஒரு பெரிய கதை நிகழ்ந்து அடுத்த ஆண்டுக்கு ‘கேரி ஓவர்’ ஆகியிருக்கிறது. தமிழிலக்கியத்தின் நூறாண்டுகால வரலாற்றில் இப்படி இன்னொரு எழுத்தாளர் செயல்பட்டதில்லை என நினைக்கிறேன். உண்மையிலேயே ஒரு வரலாற்றுநிகழ்வுதான்.


’மேதை எரிச்சலூட்டுவார்’ என்பார்கள். நான் அதை  ’உண்மையான எழுத்தாளன் எரிச்சலூட்டவேண்டும்’ என்று புரிந்துகொள்வேன். உண்மையான எழுத்தாளன் தன் மனதுக்கு தோன்றியதைச் சொல்பவன். ஆனால் அமைப்புபலம் இல்லாமல் நிற்கும் தனியன். ஆகவே அவன்மேல் வழக்குகள், பூசல்கள், தாக்குதல்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். இங்கே இடதுசாரிகள்தான் உங்களை கொஞ்சம் நாகரீகமாக தாக்குபவர்கள். இந்துத்துவ வலதுசாரிகளிடமிருப்பது அறிவார்ந்த எந்த அடிப்படையுமில்லாத நேரடியான காழ்ப்பு மட்டுமே.


இத்தனையையும் கடந்து சமகாலத்தில் வாசகர்களுடன் தொடர்பிலிருக்கிறீர்கள். அவர்களை வழிநடத்துகிறீர்கள். இந்த தளம் தொடங்கி பதிமூன்றாண்டுகள் ஆகின்றன. இந்த பதிமூன்றாண்டுகளில் உங்களை தொடர்ந்து எழுந்த, உங்களை ஆதர்சமாகக்கொண்ட எழுத்தாளர்கள்தான் தமிழ் நவீன இலக்கியத்தில் பெரும்பகுதியினர். வரலாறுகள் இப்படித்தான் உருவாகின்றன என்று தோன்றுகிறது


ஆனந்த்


 


வணக்கம் ஜெ

உங்களுக்கெதிரான கண்டன அறிக்கையில் கையெழுத்து போட்டவர்கள் பட்டியல் வியப்பளிப்பதாக உள்ளது. அதில் உள்ள பல பெயர்கள் உங்கள் தளத்தில் நீங்கள் பல்வேறு கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ள நபர்கள்; இன்னும் சில பதிப்பகத்தார்கள் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகமானவர்கள் என்றே கருதுகிறேன். அவர்களுக்கெல்லாம் உங்களைப்பற்றி தெரியாதா ? உங்களின் விமர்சனம் எப்போதும் தனிப்பட்ட காழ்ப்பாக இருந்ததில்லை என்பதை அறியாதவர்களா இவர்கள். உங்களின் விமர்சனத்தின் தரம் என்ன என்பது உங்களின் சாதாரண வாசகர்களுக்கே நன்கு தெரியும். அப்படியிருக்க இவர்களுக்குத் தெரியாதா ? இருந்தும் என் இந்தக் கூச்சல் ?


நீங்கள் எனக்குத் தெரிந்து தனியொருவராகத்தான் கருத்து சொல்லியும் விமர்சனம் செய்தும் வருகிறீர்கள். உங்கள் தளத்தை படிக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து நான் இதுவரை  ‘ஜெயமோகன் தலைமையில் கண்டன அறிக்கை’ என்பதாக ஒன்றைப் பார்த்ததில்லை. உங்களை விமர்சிப்பதென்றால் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கலாமே. கூட்டம் கூடி கண்டன அறிக்கை விடும் அளவுக்கு நீங்கள் என்ன அவதூறு செய்துவிட்டீர்கள்? அவதூறோ, கொடுமையோ நடக்கும் இடத்தில் கண்டன அறிக்கையெல்லாம் சரிதான். இதுபோன்ற சூழல் ஒருவித கசப்பையே ஏற்படுத்துகிறது. அரசியல்வாதிகள் போல  இலக்கிய உலகமும்  அப்படித்தான் போல.


சில ஆண்டுகளுக்கு முன் நீங்கள் பெண் எழுத்தாளர்களை அவமதித்து விட்டீர்கள் என்று பெண்ணியக்கூட்டறிக்கை ஒன்று வந்தது. அதிலும் ஒரு பெரிய கையெழுத்துப்பட்டியலும் இருந்தது. இதுபோன்ற கூட்டறிக்கைகள் எல்லாம் ஒருவகையில் ‘பாத்தியா எங்க வெய்ட்ட… ஜாக்கிரதையா இருந்துக்கோ…’ என்ற பாணியில்தான் இருக்கிறது.


விவேக்


 


அன்புள்ள ஜெ,

உங்கள் மீது பொழியப்படும் வசை இதுவொன்றும் புதிதல்ல. இதற்கு நீண்ட வரலாறு உண்டு என்றே நினைக்கிறேன். இப்போது இணையம் வந்த பிற்பாடு சமூக வலைத்தளங்களில் பல மொண்ணைத்தனமான இடுகைகளால் ஆள்பிடிப்புச் செய்வது அறிவுத்தளத்துக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை.


உங்களது தொடரியக்கம் தமிழ் இலக்கியம் விரும்பும் பயணம் என்றே நினைக்கிறேன். என்னுடைய நண்பர்களுக்கு நவீன இலக்கியப் பரீட்சயம் இல்லாது போனாலும் உங்களது எழுத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன். அதில் ஓரிருவர் உங்களது நூல்களைக் கற்கத் தொடங்கிச் சிலாகிக்கின்றனர். நான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜெயமோகனை எனது நண்பர்களிடம் அறிமுகப்படுத்தித் தோற்றுப்போனேன். ஆனால் இன்று உங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்கிறார்கள். அது இலக்கியம் அரசியல் என்ற அவரவர் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப.


இந்த செயப்பிரகாசகம் எல்லாம் உங்களுக்குத் தகுதியானவர் அல்ல என்று நினைக்கிறேன். அவரைக் குறித்த விளக்கங்களை நீங்கள் எழுதுவது அவர்களுக்கு புளகாங்கிதமாக இருக்கும். மொண்ணை இலக்கியம் எழுதிவிட்டு சர்ச்சைகளாலும் வசைகளாலும் முன்னேற முனைபவர்களைக் கண்டிப்போம் என்ற உங்களது கருத்தியல் ஏராளமானவர்களைச் சுடுகிறது. பொறாமைக் குழியில் இருந்து கத்துகிறார்கள்.


நீங்கள் எழுதாத ஒரு விடயத்தைப் பகிர்ந்தமைக்கு நீங்கள் எழுதியதாக இட்டுக்கட்டும் தமிழ் இலக்கிய உலகத்தின் அறியாமை இது ஒன்றும் புதிதல்ல. நாம் வாழும் காலத்தின் சாதனையாளன், மாஸ்டர் நீங்கள். இந்தப் புரிதல் காலம் அவர்களுக்குக் கற்பிக்கும். பாரதியார், புதுமைப்பித்தன் இருவரையும் உணர நம் தமிழ்ச்சமூகத்துக்கு கால் நூற்றாண்டாவது எடுத்திருக்கும் அல்லவா?


சுயாந்தன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2020 10:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.