மகிழ்ச்சி
உன் உள்ளத்துக்கு வருத்தம் விளைவிக்காதே!
உன் திட்டங்களால் உன்னையே துன்பத்துக்கு உட்படுத்தாதே!
உள்ள மகிழ்ச்சியே மனிதரை வாழவைக்கிறது.
அகமகிழ்வே மானுடரின் வாழ்நாளை வளரச்செய்கிறது
உன் உள்ளத்துக்கு உவகையூட்டு.
உன்னையே தேற்றிக்கொள்.
வருத்தத்தை உன்னிடமிருந்து தொலைவில் விரட்டிவிடு
வருத்தம் பலரை அழித்திருக்கிறது.
அதனால் எந்தப் பயனுமில்லை.
பொறாமையும் சீற்றமும் உன் வாழ்நாளைக் குறைக்கும்.
கவலை உரியகாலத்துக்கு முன்னரே
முதுமையைக் கொண்டுவரும்.
மகிழ்ச்சியான நல்ல உள்ளம்
நல்லுணவை சுவைத்து இன்புறுகிறது.
[பழைய ஏற்பாடு. சீராக் 31/ 21-25]
அது நீயே, ஜனவரி 2010
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Published on December 31, 2011 10:31