தேவதச்சனுக்கு இரு முகம். ஒன்று தமிழின் முக்கியமான முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். இன்னொன்று, நவீனத் தமிழிலக்கியத்தைக் கட்டமைத்த இலக்கிய மையங்களில் ஒன்று அவர். மிகச்சிறந்த உரையாடல்காரர். தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.நவீனக்கவிதையின் வாசகர்கள் அனைவருக்கும் மனநிறைவூட்டும் விருது.
[image error]
இந்த இந்தியப்பயணம் இல்லையேல் தேவதச்சனுக்கு ஒரு விழா உடனடியாக ஏற்பாடு செய்திருப்பேன். வேறுவழியில்லை. ஆகவே மார்ச் மாதம் தேவதச்சனை வாசகர்கள் சந்திக்கவும் விவாதிக்கவும் வாழ்த்தவுமாக ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை நிகழ்த்தலாமென நினைக்கிறேன்.சென்னையில் எனத் திட்டம்.நண்பர்களின் ஒத்துழைப்பை ஒட்டிச் செய்யலாம்
தேவதச்சனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், வணக்கங்கள்
தொடர்புடைய பதிவுகள்
யுவன் வாசிப்பரங்கு
விக்கிரமாதித்யனுக்கு விளக்கு
விக்கிக்கு விளக்கு
எஸ்.வைத்தீஸ்வரனுக்கு விளக்கு விருது
ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விளக்கு விருது விழா
Published on December 28, 2011 08:14