சென்னையில் பேசுகிறேன்
தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பு இவ்வருடம் முதல் டிசம்பரில் இசைவிழாச்சூழலை ஒட்டி ஓர் இலக்கியச்சூழலையும் உருவாக்கும் நோக்குடன் செயல்பட ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாகத் தொடர் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பெரும்பாலும் தமிழ்மரபு, பண்பாடு பற்றிய உரைகள். ஒரு நாள் ஒரு தலைப்பில் ஒருவர் விரிவாக உரையாற்றும் நிகழ்ச்சி இது.
இடம் : ராகசுதா அரங்கம் ,85/2 லஸ் அவென்யூ, மைலாப்பூர்.
சென்னை 4
தொலைபேசி எண்: 24992672
டிசம்பர் 23 அன்று மாலை நான் முதல் உரையாற்றுகிறேன். குறுந்தொகை தமிழ்க் கவிமரபின் நுழைவாயில் என்ற தலைப்பில் உரை
டிசம்பர் 24 அன்று பேராசிரியர் சா.பாலுச்சாமி அவர்கள் உரையார்றுகிறார். அர்ச்சுனன் தபசு மாமல்லபுரம் சிற்பம் பற்றிய புதிய பார்வை என்ற தலைப்பில்
டிசம்பர் 25 அன்று ஸ்தபதி கெ.பி.உமாபதி ஆச்சாரியா அவர்கள் உரையாற்றுகிறார். இந்தியப் புனித கலைப்பாரம்பரியம் என்ற தலைப்பில்
டிசம்பர் 26 அன்று முனைவர் குடவாயில் பாலசுரமணியம் உரையாற்றுகிறார் கங்கைகொண்ட சோழபுரம் வரலாறும் கலையும் என்ற தலைப்பில்
டிசம்பர் 27 அன்று நாட்டியக்கலைஞர் ஸ்வர்ணமால்யா கணேஷ் உரையாற்றுகிறார் . ரகுநாதநாயக்கரின் வாழ்க்கை என்ற தலைப்பில் [காணொளி உரை]
இசையுடன் மரபைக் கொண்டாடுவோம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
