ஜெயமோகன் அவர்களுக்கு
மகாபாரதத்தைத் தழுவி வந்த பல கதைகளை நாவல்களாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படித்து வந்துள்ளேன். ஆனால், ராமாயணத்தைத் தழுவிய புத்தகங்களை இதுவரை நான் அறிந்ததில்லை. இருந்தால் சொல்லவும். அனுமனின் தரப்பில் இருந்து கதை சொல்வது போலவோ, ராவணனின் தரப்பில் இருந்து கதை சொல்வது போலவோ, அந்த மாதிரிப் புத்தகங்கள் தமிழிலோ ஆங்கிலத்திலோ இருந்தால் சொல்லுங்கள்.
Regards
Suresh Kumar
http://crackedpots.co.in/
எனக்குத்தெரிந்து ராஜாஜியின் சக்ரவர்த்தித் திருமகன் மட்டுமே ராமாயணம் சார்ந்து தமிழில் எழுதப்பட்டுள்ளது.
அகலிகை கதை புதுமைப்பித்தனால் சாபவிமோசனம் என்ற பேரில் எழுதபட்டுள்ளது
ராமாயணக்கதை நவீன வடிவில் எழுதப்பட்டுள்ளது.
ராமாயணக்கதை நவீன இலக்கியத்தில் பெரிய பாதிப்பை செலுத்தவில்லை. காரணம் அதில் தர்ம அதர்ம மயக்கம் இல்லை என்பதே
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
பாரதி விவாதம் -6 – இறை,உரைநடை
ராமாயணத்தை விடத் தொன்மையானதா இலியட்?
ராஜாஜி ஒரு கடிதம்
ராஜாஜி,மபொசி_ கடிதங்கள்
மபொசி,காமராஜ், ராஜாஜி..
புதுமைப்பித்தன் இன்று…
புதுமைப்பித்தனின் வாள்
Published on October 28, 2011 11:30