தினமணி-சுரா-வினவு

இன்றைக்கு தினமணியிலே உன்னுடைய கருத்தை வாசித்தேன். நீ என்ன இலக்கியச்சண்டியரா? கல்கி, சுஜாதா , பாலா, பாரதியார் என்று ஒவ்வொருத்தரையாக நீ வசைபாடுவதை இனியும் பொறுத்துக்கொள்ளமுடியாது. சுந்தர ராமசாமியை அற்பன் என்று சொல்ல நீ யார்? நீ அற்பனுக்கு அற்பன். உன்னைப்போன்ற அற்பனை கூடவே வைத்திருந்து சோறு போட்டதுதான் சுந்தர ராமசாமி செய்த தப்பு. சோறுபோட்ட கையை கடித்த நாய் நீ. சுந்தர ராமசாமி அவருக்காக எழுதினார் என்றால் நீ என்ன உன் அம்மாவின் கூத்தியாளுக்காகவா எழுதினாய்? நாக்கை அடக்காவிட்டால் அடக்க வைக்கவேண்டியிருக்கும்


வைத்தியநாதன்


திரு வைத்தியநாதன்,


நன்றி


தினமணி கட்டுரையில் உள்ள அந்த வரி என்னுடையது அல்ல. ஒரு நண்பர் தேடி அனுப்பியிருந்தார்


சு.ரா. தனக்காக தன் எழுத்தையும், தன் எழுத்திற்காகத் தன்னையும் நேசித்த எழுத்தாளர், அவர் ஒரு தன்னெழுத்து தற்காதலியவாதி. தத்துவ உலகில் இவர்கள் அற்பவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.


இந்த வரி வினவு தளத்தில் என்னையும் சுந்தர ராமசாமியையும் சேர்த்து வசைபாடி எழுதப்பட்ட கட்டுரையின் முகப்பில் வினவு சிந்தனையாளர்களின் கருத்தாக அளிக்கப்பட்டது.


அதன் தலைப்பு சுந்தர ராமசாமி – ஜெயமோகன் : 12,600 வார்த்தைகள் ! . ஆகவே அந்த வரிகளை நான் சுந்தர ராமசாமியைப்பற்றி சொன்னதாக எடுத்துக்கொண்டு கட்டுரையாளர் எழுதிவிட்டார்


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 15, 2011 21:54
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.