எதைப் பேசக்கூடாதென்று யார் அவரை நெருக்குகிறார்கள்?

தன்னை என்கவுண்டர் செய்வதற்கு முயற்சி நடப்பதாக வும் ராஜஸ்தான் காவல்துறை தன்னை இம்சிப்பதாகவும் திரு தொகாடியா கூறுகிறார்.அவர் இருப்பது குஜராத்தில்அவரைக் கைது செய்ய வந்திருப்பது ராஜஸ்தான் காவல்துறைஇரண்டு மாநிலங்களிலும் மத்தியிலும் அவரது சொல் பேச்சைக் கேட்கக்கூடிய பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சி.அவர்களது ஆட்சி நடக்கக்கூடிய குஜராத்தில் அவர் மாயமாகிவிட்டதாக காவல்துறை சொல்கிறது.இல்லை சர்க்கரை அளவு கணிசமாகக் குறைந்துவிட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை கூறுகிறதுதனது வாயை அடக்க அரசு முயல்கிறது என்கிறார். எனில்எதைப் பேசக்கூடாதென்று யார் அவரை நெருக்குகிறார்கள்?2015 இல் இவர்மீது ராஜஸ்தானில் பதியப்பட்ட வழக்குக்காக இவரை இப்போது தேடி வந்ததாக ராஜஸ்தான் காவல்துறை சொல்கிறது. எனில்,1) இவ்வளவு காலம் எப்படி , ஏன் இவரைக் கைது செய்யாமல் விட்டு வைத்தார்கள்?
2) இவ்வளவு காலம் விட்டு வைத்தவர்கள் இப்போது அவரைத்தேடுவதற்கு அவரே குறிப்பிடுவதுபோல ஏதேனும் உள்குத்து இருக்கிறதா?தொகாடியா கலவரத்தைத் தூண்டும்விதமாகப் பேசியதற்காக வழக்கு எனில் தமிழ்நாட்டில் அவர் இதைவிடக் கொடூரமாக பேசியதற்கு ஏன் வழக்குள் ஏதும் இல்லை?மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை சென்று சந்தித்த ஹர்திக் பட்டேல் மற்றும் காங்கிரச் தலைவர்களது இந்த செயலை மனுஇதாபமான நடவடிக்கையாகவே கொள்வோம் இப்போதைக்கு.நமது அய்யங்களும் தெளிவுபெற வேண்டும், அவரும் நலம் பெற வேண்டும்.
Published on January 16, 2018 03:01
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)