காற்று கடிதங்கள்

aruna


ஆசிரியருக்கு வணக்கம்,


தங்களின் காற்று -பதிவை படித்தபோது உங்களை மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.வண்ணதாசனின் கதைகளை படித்து அவரின்மேல் பிரியம் இருந்தாலும், அவரது கடிதங்களின் தொகுப்பான ‘எல்லோர்க்கும் அன்புடன்’படித்தபின் அட இவரும் நம்மைப் போலவே இருக்கிறாரே என மிக நெருக்கமாக உணர்ந்ததைப் போல…


காற்று-என்ன ஒரு அருமையான தலைப்பு…கூடவே இருக்கும்வரை அதைப் பற்றி எதுவும் எண்ணாமல், இல்லாதபோது புழுக்கமாகவும் மூச்சு திணறலாகவும் அதைப்பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டு …காற்று வந்தவுடன்தான் நிம்மதி…


சிவசுப்ரமணியன் காமாட்சி


***


அன்புள்ள ஜெ


காற்று முக்கியமான பதிவு. போகிற போக்கிலே எழுதப்பட்டது. நீங்கள் எழுதும் பதிவுகளில் இந்தமாதிரி டைரி போன்ற பதிவுகள்தான் எனக்கு மிகவும் முக்கியமானவை என தோன்றுகிறது. இந்தப்பதிவுகளில் உள்ள சரளமான நகைச்சுவையும் உங்கள் சொந்த வாழ்க்கையின் சித்திரமும் அழகானவை


நாம் விரும்பும் எழுத்தாளருடன் நாமும் வாழ ஆசைப்படுகிறோம். கூடவே நடக்கவும் பேசவும். அதெல்லாம் இந்த டைரி வழியாகவே காணக்கிடைக்கிறது. கற்பனையில் உங்களுடன் இருப்பது மிகுந்த உற்சாகமான அனுபவமாக இருக்கிறது


செல்வக்குமார்


காற்று


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2017 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.