நுண்சொல் -கடிதங்கள்

manu


 


மதிப்பிற்குரிய ஜெ


வணக்கம்


தங்கள் ‘அமுதமாகும் சொல்கட்டுரை  மிக தெளிவை அளித்தது . தலைப்பே சட்டென்று நான் தெரிந்து கொள்ள வேண்டியதை உணர்த்திவிட்டது . இப்பதிவில் நீங்கள் கூறி இருப்பதை தெரிந்து கொள்ளவே ஊட்டி சந்திப்பில் ..கவிதை.. மந்திரம் ..என்று கேட்க முயற்சித்தேன் .சரியாக  கேட்க தெரிய வில்லை .


ஒரு சொல் அல்லது ஒரு வார்த்தை எப்படி சட்டென்று வெடிகுண்டு போல் அனைத்து   கடந்த காலத்தையும் கலைத்து போட்டு புது உத்வேகத்தையும் வாழ்விற்கு புது பரிமாணத்தையும் அளிக்க முடியுமென்பது அறிவிற்கு கொஞ்சம் புதிராகவே இருந்தது , ஆனால் அது அனுபவத்தில் எனக்கு பல முறை சாத்திய  பட்டு கொண்டே இருந்தது .


ஒரு நிகழ்வு ,இமய யாத்திரை சென்ற போது  கேதார் கோவில் வளாகத்தில் பஜ கோவிந்தம் ..கூட்டாக உச்சரித்த தருணம். எல்லா பழையனவும் கழிந்து ..அந்த வார்த்தைகள் மட்டுமே   வாழ்வை முன்னோக்கி வீரியமுடன் நடத்த போதுமானதாய் இருந்தது. புதிதாய் பிறந்தது போல் இருந்தது .எனக்கு ஒரு வார்த்தைக்கும் அர்த்தம் கூட தெரியாது .


அன்றிலிருந்து எழுந்த கேள்வி அது ..எப்படி பல நூறு வருடங்களுக்கு முன் உச்சரிக்க பட்ட சில வார்த்தைகள் அதே வீரியத்தை தாங்கி ஆயிரம் ஆண்டுகள் தாண்டி வெடித்தெழ முடிகிறது? அச் சொல் எதனை தன்னுள் வாங்கி அத்தகைய வீரியம் கொண்டது?


அதற்கு தக்க பதிலாக தங்கள் கட்டுரை அமைந்தது. மிக்க நன்றி.


அன்புடன்


அனந்த முருகன்


 


அன்புள்ள ஜெ


 


அமுதமாகும் சொல் முக்கியமான கட்டுரை. சுருக்கமாக இருந்ததனாலேயே மொத்தக்கட்டுரையையும் நினைவில் வைத்துக்கொள்ள முடிந்தது. கட்டுரை இருவகையான மந்திரங்களைச் சொல்கிறது. ஒன்று மூலமந்திரம் இன்னொன்று ஞானமந்திரம். இன்னொருவகை மந்திரம் உண்டு, அதை அவியக்தம் என்பார்கள். ஹ்ரீம், ஸ்ரீம் போன்ற வெறும் ஒலிகள் அவை. அர்த்தமாக ஆகிவிடக்கூடாதென்பதனாலேயே அவற்றை அப்படி அமைத்திருக்கிறார்கள். மந்திரங்களில் ஒன்றுமே இல்லை. அவற்றை ஈடுபாட்டுடன் திரும்பத்திரும்ப உள்ளே ஒலிக்கவிடும்போதுதான் அவற்றுக்கு சக்தி வருகிறது


 


சாரங்கன்


 


அமுதமாகும் சொல்
தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 11, 2017 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.