கொற்றவை -கடிதம்

kotta

முதல் பகுதி நீர்:


அறியமுடியாமையில் இருக்கிறாள் அன்னை.அறியமுடியாமையின் நிறம் நீலம்.நீலத்தை மக்கள் அஞ்சுகிறார்கள்.நீலத்தை தன்னுள் கொண்டவள் கன்னி அவளை வணங்குகிறார்கள்.நீலக்கடலின் ஆழத்தை குமரி என்றும்,தமிழ் என்றும் சொல்லால் சுட்டினர் ஆனால் பொருளோ ஆழத்தில் மௌனமாக கருமையின் குளிரில் உள்ளது.எனவே அறியயோன்னமையிடம் அடிபணிவோம்.


முதல் தெய்வம் குமரி அன்னை தோன்றுகிறாள்.அன்னை தோன்றினால் அழிதலும்,குடிபெயர்தலும் நிகழ்கிறது;மதுரையும்,சோழமும் உருவாகிறது.ஆக்கலை யும்,அழிவையும் அன்னை என்றே பெயரிடுகிறாற்கள்.


இரண்டாம் பகுதி காற்று:


கண்ணையன்னை பிறக்கிறாள் கண்ணைகியாக,கொற்றவை பிறக்கிறாள் வேல் நெடுங்கண்ணியாக.அன்னையருக்கிடையே சிறு மகவாக கோவலன் பிறக்கிறான்.கோவலன் அறியமுடியமையின் ஆழத்தை கணிக்க இயலாமல் இசையால் நிரப்ப முயழுகிறான்.கோவலனும் கண்ணகியும் மணம்முடிக்கிறர்கள்.


கோவலன் பாறையை தழுவும் காற்றென கண்ணகியை உணர்கிறான் எனவே மாதவியை நாடுகிறான்.கோவலன் மாதவியை யாழை போன்று மீட்டுகிறான். மாதவியும் ஒரு யாழே .கடலாடு விழாவின் இறுதியில் மாதவி மீட்டும் யாழ் இசையின் ஆழத்தில் இருள் கனத்த கருவறையின் உள்ளே கண்ணைகியை காண்கிறான்.மாதவியை வெறுப்பினூடக பிரிகிறான்.அன்னையை நோக்கி வரும் மகவு என கோவலனை ஏற்றுக்கொள்கிறாள் கண்ணைகி.இருவரும் நகர் நீங்குகிறார்கள்.


மூன்றாம் பகுதி நிலம் :


நீலி கண்ணகியின் கற்பு எனும் ஒழுக்கத்தை (தளையை) கேள்விக்கு உட்படுத்துகிறாள்.குலக்கதைகளில் வரும் கதைகளில் பெண்களின் கற்ப்பின் மேல் சந்தேகபடுகிறார்கள்.பெண்கள் தன்னை அழித்துகொள்கிறார்கள்,மக்கள் அவர்களை தெய்வமாக்கி வணங்குகிறார்கள்.நீலி கற்பு நிலையானது அல்ல என்கிறாள்,நிலையில்லாது தர்மம் அல்ல அன்பே நிலையானது.


நீலி ஒவ்வொரு பெண்ணின் ஆழ்மனது ஆசைகள்,இலட்சியங்கள் மற்றும் அக விடுதலைனக்காண கனவு.


நீ என்னுடன் இரு, உன் சொற்கள் என்னைச் சிறுமைப்படித்துகின்றன என் எண்ணங்கள் மீது சகதியை உமிழ்கின்றன ஆனாலும் நீயே என்னை நிறைக்கிறாய் நீ விலகிய இடத்தில் வைப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை”


முல்லை நிலத்தை அடையும்போது கண்ணகி புகார் விட்டு நீண்ட தூரம் வந்துவிட்டாள் ஐவகை கடந்து அறிந்துவிட்டாள்.


நான்காம் பகுதி எரி :


மதுரை மன்னன் அறம் பிறழ்கிறான் கோவலன் தவறாக கொல்லப்படுகிறான்.அறம் பிழைக்கையில் அன்னை வருவாள்.கண்ணகி முன் செல்கிறாள் எல்லாப்பெண்களும் சன்னதம் கொண்டு பின் தொடர்கிறார்கள்.எல்லோருக்குள்ளயேம் கன்னி இருக்கிறாள் கண்ணகி போன்ற ஒரு பெண்ணால் கன்னி ஆழ்மனதிலிருந்து வெளிப்படுகிறாள்.கண்ணகி என்பவள் அறப்பிழை நிகழ்தலா?.கண்ணகி மதுரையை எரியூட்டுகிறாள்.தீ தொட்டபின் எதுவும் அழுக்கு அல்ல.


ஐந்தாம் பகுதி வான் :


கண்ணகி தன்னை அழித்து அறத்தை நிலைநாட்டுகிறாள்.மக்கள் அவளை தெய்வமாக்கி வணுங்கிறார்கள்.இங்குள்ள பெண் தெய்வங்கள் எல்லாம் அறம் பிழைக்கையில் தோன்றியவர்களா?


மணிமேகலை தன் குலத்தை,தன் உடல் அழகை இழந்து பெண் எனும் எஞ்சும் கன்னியாக மட்டும் ஆகா விழைகிறாள்.மெய்யறிவால் பிறப்பை தாண்டி கன்னியாகிறாள் வாழும்போதே தெய்வமாக காப்பிரியர்கள் அவளை வணங்குகின்றனர்.


இளங்கோ அன்னையை கன்டடைதலையே வாழ்க்கையின் பொருள் என கொள்கிறார்.இறுதியில் அன்னையே தான் என உணரகிறார்.ஆணும் ஒரு அன்னைதான்.

jinu

இவை அனைத்தும் முடிவிலியற்ற,முழுமையான வானத்தால் சூழப்பட்டுள்ளது.


“அவ (எங்கள் குடும்ப கன்னித்தெய்வம்) என் கனவில வர்ராப்பா அந்த மூலைய (தென் மேற்க்கு) நோக்கி போறப்பா அவள கும்படனும்” என சில வாரங்களுக்கு முன்பு எங்க அப்பத்தா சொன்னது.



கன்னியை வணங்குவோம்!


இப்படிக்கு உங்கள் மாணவன்,


தி.ஜினுராஜ் .


 


கொல்லிமலைச் சந்திப்பு ஜினுராஜ் கடிதம்


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 28, 2017 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.