குறளில்.. கடிதம்

kural


அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். வயது 67 முடிந்துவிட்டதால் இரவு 6 மணிநேரமே தூக்கம். நேற்று இரவு 2 மணிக்கு விழித்துக் கொண்டுவிட்டேன்.


‘குறளினிது’ காணொலியை மீண்டும் கேட்டேன்/ பார்த்தேன்.


செல்விருந்து, வருவிருந்து பற்றிய விளக்கம், அதற்குக் கூறிய வாழ்க்கை உண்மை நிகழ்வு ஆகியவை மனதைக் கவர்ந்ததுடன், சிந்திக்கவும் தூண்டின.


பிராமணர் வீட்டுத் திருமணங்களில் மறுநாள் மாப்பிள்ளை வீட்டாரை வழியனுப்பி வைக்கும் போது கட்டுசோறு (கட்டுசாதக் கூடை) கட்டி அனுப்புவார்கள்.புக்ககம் செல்லும் பெண் ‘பத்தோடும் (பற்றோடும்) பசையோடும் (பாசத்துடனும்) சென்று சேரவேண்டுமாம.அந்த கட்டுசாதக் கூடையை வெண்துணியால் சுற்றிக்கட்டும் பழக்கம் உள்ளது.இப்போதெல்லாம் பிளாஸ்டிக் வாளிகளில் உணவினை இட்டாலும், அதையும் வெண்துணியால் கட்டுகிறார்கள்.


நீத்தார் கடன், திவசத்திலேயும் ‘பாதயம்’ அளித்தல் என்பது ஓரு சடங்கு.அதிலும் தயிர் சாதத்தினை ஒரு வெண்துணியில் பொதிந்து ஒரு சவுண்டி பிராமண‌னுக்கு தட்சணையுடன் அளிக்கும் வழக்கம் உள்ளது. பாதசாரி, வழிப்போக்கர்களுக்கு (செல் விருந்து?) அளிப்பது தான் பாதயம்?!பாதயம் பெற்றுக்கொண்டவனுக்கு வீட்டினுள் அமர்ந்து உணவுண்ண உரிமையில்லை!!!


அதிதி என்ற சொல்லே திதி குறிப்பிடாமல் திடீரென வரும் விருந்தினரைக் குறிக்கிறது. அதிதிதான் வருவிருந்தும், செல்விருந்தும்.


“அதிதிதேவோபவ!’என்ற வேத மந்திரத்தின் உள்ளுறைப்பொருள். டார்ஜிலிங்கில் பூனைக்கறியும், மீன் சோறும் கொடுத்த தாயின் உள்ளத்தில் ஊறியிருப்பது. அதுவே இத்தாய்த் திருநாட்டின் ஆன்மா!


அன்புடன்,


கே.முத்துராமகிருஷ்ணன்.


***


ஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண


குறளினிது – ஜெயமோகன் உரை – Playlist


https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GrmSRChXKy42VT9RKiRG0M


***




தொடர்புடைய பதிவுகள்

மதுரையில் பேசுகிறேன்
என் உரைகள், காணொளிகள்
என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?
வாழும் கணங்கள்
கவிதையின் அரசியல்– தேவதேவன்
கசப்பு அண்டா மனிதன்! -செல்வேந்திரன்
தொடுதிரையும் கவிதையும்
பிழைத்தல், இருத்தல், வாழ்தல்
பத்து சட்டைகள்
பாலக்காட்டில் பேசுகிறேன்
வாசிப்பின் நாட்டிய சாஸ்திரம்
ஈரம்
மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்
விரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.
கடலின் அலை
புதியநாவல் (உரை)
மலையாள இலக்கியம்
நமக்குள் இருக்கும் பேய்
பசியாகி வரும் ஞானம்
சென்னையில் இன்று உரையாற்றுகிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2017 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.