சோம்பல், எதிர்சோம்பல் -கடிதங்கள்

dog


 


அன்பு ஜெமோ,


நலம் தானே?


ஆணவமும் சோம்பலும் & எழுதலின் விதிகள் இரண்டுமே மனதுக்கு உற்சாகத்தை அளித்தன. நன்றி.


நண்பரின் கேள்வியைப் பார்த்தபோது, இதற்கு ஏற்கனவே பதில் சொல்லியிருக்கிறீர்களே என்று தோன்றியது. ஒருநாளில் உங்கள் வேலைகள் என்னென்ன என்று விவரித்திருந்தீர்கள்.


ஒருநாள் / தினமும்/தினசரி வேலை/ஜெயமோகன் என்றெல்லாம் விதவிதமாக கூகுளாண்டவரிடம் ஜெபித்ததில், கருணையுடன் கீழே உள்ள லிங்க்கை கொடுத்தருளினார்.


அது, ஒவ்வொரு நாளும்.


http://www.jeyamohan.in/582#.WOp_ZWclHIU


கேள்வி கேட்ட நண்பருக்கு இது உதவலாம்.


அன்புடன்


செங்கோவி


 


அன்புள்ள செங்கோவி


 


நன்றி


 


கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப்பின்னரும் அன்றாடம் பெரிய மாறுதல்கள் ஏதுமில்லாமல் அப்படியே நீடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது


 


ஜெ


 


அன்புள்ள ஜெ,


 


உங்கள் செயல்திட்டம் பற்றி சொல்லியிருந்தீர்கள். உண்மையில் செயலுக்கு திட்டம் வகுப்பதெல்லாம் பெரிய விஷயம் அல்ல. Passion என்பதே முக்கியமானது. நான் பெருஞ்செயல்களைச் செய்பவர்களை கண்டிருக்கிறேன். அவர்களைச் செயலாற்ற வைப்பது பெரிய ஊக்கமாக அமைவது எல்லாமே அந்த பற்றுதான். சோம்பேறித்தனம் அல்லது சலிப்பு என்பவர்கள் எதன்மீதும் பெரிய பற்று கொள்ளாதவர்கள். அவர்களுக்கு அது அமையவில்லை. மிகப்பெரிய Passion அமைவதும் ஒரு வரம்தான் என நினைக்கிறேன்


 


ஜெயராமன்


 


அன்புள்ள ஜெயராமன்,


 


செயலூக்கம் கொள்ளச்செய்வதில் பற்றுறுதி அளவுக்கே தீவிரமானது வெறுப்பு. கடும் காழ்ப்பினாலேயே உச்சகட்ட செயலூக்கத்துடன் இருப்பவர்கள் உண்டு – முகநூலில் பெரும்பாலானவர்கள் அப்படித்தான். அந்தக் காழ்ப்பை அவர்கள் முற்போக்கான நோக்கம் கொண்டது, மனிதாபிமானத்திலிருந்ந்து எழுவது என்றெல்லாம் காட்டிக்கொள்வார்கள்


 


ஆனால் அது மிக அழிவுச்சக்தி கொண்டது. அதில் ஈடுபடுபவரை உள்ளூர அதிருப்தியும் கசப்பும் நிறைந்தவராக ஆக்குகிறது.அவரை மேலும் மேலும் விசைகொள்ளவைக்கிறது . ஒருவரின் செயல்பாட்டில் நேர்நிலையான அம்சம் எத்தனை சதவீதம் என்று பார்த்தே அதை மதிப்பிடவேண்டும். எதிர்நிலையாகவே செயல்படுபவர் பிறருக்கு எதிராக அல்ல, தன்னுள் இருந்து உழற்றும் அதிருப்திக்கு எதிராகத்தான் போராடுகிறார். அது ஒருவகை தற்கொலைப்பாதை


 


செயல்பாடு என்பது நேர்நிலையான, படைப்பூக்கம் கொண்ட செயல்பாடு மட்டுமே. வேறு எந்தச்செயல்பாடும் எந்நோக்கம் கொண்டதாயினும் வீண். அதற்குச் சோம்பல் நல்லது


 


ஜெ



பழைய கட்டுரைகள்


ஆணவமும் சோம்பலும்



எழுதலின் விதிகள்


செயலின்மையின் இனிய மது
ஒருமரம் மூன்று உயிர்கள்
செயலின்மையைச் சொல்கிறதா இந்துமதம்?
தன்னறம் சாங்கிய யோகம்
கர்மயோகம்
தன்னறம்
யாதெனின் யாதெனின்…
செய்தொழில் பழித்தல்
விதிசமைப்பவனின் தினங்கள்

விதிசமைப்பவர்கள்


தேர்வு செய்யப்பட்ட சிலர்


நான்கு வேடங்கள்
தேடியவர்களிடம் எஞ்சுவது
தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 11, 2017 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.