காஷ்மீரும் ஊடகங்களும்

kash


பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,


 


வணக்கம்.


 


ஏற்கனவே ஒரு முறை – எனது கேள்விக்கு பதிலாக – நீங்கள் காஷ்மீரில்  நமது ராணுவத்திற்கும்,காவல்துறைக்கும் எதிராக நடக்கும் கல்லெறிதல் சம்பவங்களின் பின்னணி பற்றி  விரிவாக எழுதியிருக்கிறீர்கள்.நேற்று அதே போன்று ஒரு சம்பவம் நீண்ட நாள்களுக்கு பிறகு நடந்துள்ளது.ஆனால் இதில் மேலும்  ‘முன்னேற்றமாக’ (?!) இந்த தடவை ஒரு இடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதியை கொல்வதற்காக நமது ராணுவமும் ,காவல்துறையினரும் சுற்றி சூழ்ந்தபோது அவனை காப்பாற்றி தப்ப வைப்பதற்காக ஒரு இளைஞர் கும்பல் கல் வீசி தாக்கியிருக்கிறது.எச்சரித்தும் கேளாததால் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் கல்லெறிந்தவர்களில் 3 பேர் இறந்திருக்கிறார்கள்,அந்த தீவிரவாதியும் கொல்லப்பட்டிருக்கிறான்,பாதுகாப்பு படையினர் 60 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.இந்த செய்தியை விஷமத்தனமான தலைப்புடன் முன்னணி செய்தி நிறுவனங்கள் எப்படி வெளியிட்டிருக்கின்றன பாருங்கள்! -நமது தேசிய நாளிதழ் தி ஹிந்து உள்பட! -.


 



THE HINDU :  3 civilians, militant killed in J&K encounter
India Today: Kashmir: Shutdown over Budgam encounter civilian deaths disrupts normal life in Valley
First Post: Budgam encounter: Three civilians and a militant killed, separatists call for strike in Kashmir
DECCAN HERALD: 3 civilians, 1 ultra killed in anti-militancy drive

 


 


இதில் ஹிந்து நாளிதழ் இச்செய்திக்கான மூலம் ‘PTI’ என்று போட்டிருக்கிறது அவர்கள் செய்தி மட்டும் கொடுத்தார்களா அல்லது  இந்த விஷமத்தனமான தலைப்பையும் சேர்த்து கொடுத்தார்களா என்று தெரியவில்லை!.மேலும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும், கம்யூனிஸ்டும் இந்த மாதிரியான ‘பொது மக்களை (ராணுவத்திற்கு எதிராக தீவிரவாதியை தப்பவைக்க கல்லெறிபவர்களை) கொல்வது அங்குள்ள அமைதிக்கான முயற்சியை மேலும் சீர்குலைக்கும் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்கள்!.


எனக்குத் தெரிந்து இச்செய்தியை ஒழுங்கான தலைப்பில் விரிவாக வெளியிற்றுயிருக்கும் ஒரே செய்தி ஊடகம் “DNA” தான்.


 


DAILY NEWS AND ANALYSIS:  J&K: 3 stone pelters killed trying to obstruct anti terror operation


 


இந்தவகை ஆஷாடபூதிகளிடம் இருந்து நமது தேசம் என்றுதான் முழுமையாக மீளும்?


 


அன்புடன்,


அ .சேஷகிரி.


 


அன்புள்ள சேஷகிரி,


 


நம் அரசியலில் ஊடகங்கள் எதிர்க்கட்சிகளின் பங்கை வகிக்கின்றன. ஆகவே இயல்பாகவே அவை அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடுகின்றன. அவற்றுக்கு அப்போதுதான் வணிக மதிப்பும் இருக்கும்.


 


அதேசமயம் கட்சிக்காரர்களால் நடத்தப்படாத அத்தனை ஊடகங்களும்  மாநில அளவில் வட்டார ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகவே செயல்படுவதைக் காணலாம். மத்திய அரசுக்கு எதிரான தி ஹிந்து சசிகலாவுக்கே ஆதரவு. இது இந்தியா முழுக்க இருக்கும் ஒரு நிலை


 


மத்திய அரசு எதிர்ப்பு என்பதை பலசமயம் தேச எதிர்ப்பாகவே இந்த ஊடகங்கள் எடுத்துச்செல்கின்றன. இத்தகைய செய்தித்திரிப்புகள் நீண்டகால அளவில் இந்தியாவில் மதவெறியை வளர்ப்பதில், சமூக அமைதியை குலைப்பதில் வகிக்கும் பங்கைப்பற்றி அவை அறிந்திருப்பதே இல்லை


 


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2017 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.