குரு நித்யா காவியமுகாம், ஊட்டி
2017 ஆம் ஆண்டுக்கான ஊட்டி காவிய முகாம் ஏப்ரல் மாதம் 28, 29, 30 [வெள்ளி சனி ஞாயிறு] தேதிகளில் நிகழும். மரபிலக்கியம், நவீன இலக்கியம், நவீனக் கலை ஆகிய தளங்களில் விவாதங்கள் நிகழும். சிறப்பு விருந்தினரும் சிலர் கலந்து கொண்டு வகுப்புகள் எடுப்பார்கள்.
முன்னரே இளம் வாசகர் சந்திப்புகளில் கலந்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை. ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக சொல்லி முன்னரே அறிவிக்காமல் வராமலிருந்தவர்கள் தயவுசெய்து விண்ணப்பிக்க வேண்டாம்.
ஊட்டி குருநித்யா நினைவு காவிய முகாம் மற்றும் சந்திப்புகளின் நிபந்தனைகள் இருபதாண்டுகளுக்கும் மேலாக மாறாதவை.
அனைத்து அமர்வுகளிலும் கண்டிப்பாகக் கலந்துகொண்டாகவேண்டும்
மது அருந்துவது கூடாது
வெளியே தங்குவதற்கு அனுமதி இல்லை
அழைக்கப்படாதவர்களுக்கு அனுமதி இல்லை
தனிப்பட்ட தாக்குதல்களும் நேரடியாக ஒருவரை நோக்கிப் பேசுவதும் தவிர்க்கப்படவேண்டும்.
விவாதங்களுக்கு மட்டுறுத்துநர் உண்டு
பங்கெடுக்க விரும்புபவர்கள் தங்கள் பெயர் மற்றும் கேட்கப்பட்ட தகவல்களை கீழே உள்ள படிவத்தில் நிரப்பவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உறுதி செய்து தனியாக மின்னஞ்சல் அனுப்பப்படும்.
மேலும் விவரங்களுக்கு 95976 33717 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
meetings.vishnupuram@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி
விஷ்ணுபுர இலக்கிய வட்டம்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

