பறக்கை சந்திப்பு
ஜெ
முங்கிக்குளி குறித்து எழுதியிருந்தீர்கள். ஏனோ பறக்கை என்னும் ஊரும் நினைவுக்கு வந்தது. ஒரு சரியான நாஞ்சில்நாட்டுக் கிராமம் என்று தோன்றியது
சந்திரசேகர்
அன்புள்ள சந்திரசேகர்
பறக்கை ஒரு சரியான நாஞ்சில்நாட்டு கிராமம். ஒசரவிளை போல. அருமநல்லூர் போல. எல்லா வீடுகளுமே வசதியானவை, புதியவை. தூய்மையான தெருக்கள். நகரின் அனைத்து வசதிகளும் கொண்டு நகரின் பரபரப்பு இல்லாமல் அமைந்தவை
பறக்கைதான் அ.கா.பெருமாள் அவர்களின் சொந்த ஊர். இந்து நாளிதழின் ஆசிரியர்குழுவில் ஒருவரும் இசைவிமர்சகருமான கோலப்பன் இவ்வூரைச் சேர்ந்தவர். பறவைக்கரசனூர். சம்ஸ்கிருதத்தில் பக்ஷிராஜபுரம். இங்கே ஜடாயுதான் முக்க்கியமான தெய்வம். மதுசூதனப்பெருமாள் ஆலயம் இங்குள்ளது. அ.கா.பெருமாள் பறக்கை மதுசூதனப்பெருமாள் ஆலயம் என்னும் நூலை எழுதியிருக்கிறார்.
ஒருகாலத்தில் முங்கிக்குளிக்கென்றே ஆன ஊர். அருமையான நீர் நிறைந்த குளம். சற்று அப்பால் மாபெரும் ஏரி. இந்த ஆண்டு குமரிமாவட்டத்தில் நல்ல வரட்சி. பறக்கைக்கு க.நா.சு அடிக்கடி வந்திருக்கிறார். இங்குள்ள ஓட்டலில் சிற்றுண்டி அவருக்குப் பிடிக்கும். நானும் நாஞ்சில்நாடனும் வேதசகாயகுமாரும் அ.கா. பெருமாளும் பத்தாண்டுகளுக்கு முன் சிற்றுண்டிக்காக அடிக்கடி செல்வோம்
ஜெ
*
குமரிமாவட்டம் நாகர்கோயில் அருகே பறக்கை என்னும் சிற்றூரில் லட்சுமி மணிவண்ணன் அமைத்துள்ள நிழற்தாங்கல் என்னும் அமைப்பில் நான் வாசகர்களைச் சந்திக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. காலை முதல் மாலைவரை இருப்பேன்
நாள் 26 -3= 2017
ஞாயிறு
அனைவரும் வரலாம். குறிப்பிட்ட திட்டங்களேதுமில்லாத உரையாடல்
நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி
லட்சுமி மணிவண்ணன்
7 / 131 E பறக்கை @ போஸ்ட், நாகர்கோயில் குமரி மாவட்டம்
தொடர்பு எண் – 9362682373
மின்னஞ்சல் – slatepublications @gmail. com
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


