பழம்பொரி இருகடிதங்கள்

pazam


 


அன்புள்ள ஜெ


 


இரண்டு செய்திகள்.


 


பழம்பொரி கட்டுரை வாசித்தேன்


 


ஒன்று நேந்திரம் பழம் கேரளத்திற்குரியது அல்ல. அது பனாமா கியூபா தீவுகளின் பழம். போர்ச்சுக்கீசியர்களால் கொண்டுவந்து கேரளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது


 


ரெண்டு பழத்தை பொரித்துச்சாப்பிடுவது பனாமா தீவுகளின் வழக்கம். கூழாக்கிச் சாப்பிடுவதும் உண்டு. பொதுவாக தென்னமேரிக்க நாடுகளிலேயே பழப்பொரியல் முக்கியமான தின்பண்டம்.


 


ஆக கேரளப்பண்பாடு என்பது இறக்குமதியே. சரியா?


 


ஸ்ரீதரன்


 


 


பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,


 


வணக்கம்.


 


நானும் உங்களைப்போல் பழம்பொரி பித்தன்தான் கேரளத்தில் இருந்தவரை. அந்தக் கட்டுரையில் வந்த புகைப்படமும்,உங்களின் கவிதை தோய்ந்த இந்த வரிகளும் கன்னிப்பெண் போல வெளியே பொன்னிறமும் உள்ளே கனிந்த இனிப்பும் கோபியர் கண்ணனை நோக்கி பாடுவது போல் பிருந்தா வனத்தில் கண்ணன் வளர்ந்த அந்தநாளும் இன்று வந்திடாதா என்று பழம்பொரியை நினைத்து   பாடத்தான் தோன்றுகிறது.


https://www.youtube.com/watch?v=YjJZFo1sm-w


 


அன்புடன்,


அ.சேஷகிரி.


 


பழத்தைப் பொரிப்பதே இரா.முருகனுக்கு அராஜகம் என்றால்,நேந்திரம் பழத்தை எங்கள் ஊரில் சாப்பிடும் பக்குவம் அறிந்தால் என் சொல்வாரோ?


 


பழத்தை வேக வைத்து,  தோலுரித்து, வெல்லப் பொடியும் நெய்யும் கலந்து பிசைந்து……….ஆஹாஹாஹா. என்ன ஒரு ருசி??


 


சிவா சக்திவேல்


 


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2017 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.