இன்று [17-08-2011] மாலை ஆறு மணிக்கு கோவை புத்தகக் கண்காட்சியில் உரையாற்றுகிறேன். காந்திபுரத்தில் வ.உ.சி பூங்கா வாசல் அருகே கைத்தறிக் கண்காட்சி அரங்கு.
புத்தகக் கண்காட்சி 12 ஆம் தேதி முதல் நிகழ்கிறது. தினமும் மாலையில் கூட்டங்கள். காலை ஒரு நண்பர் கூப்பிட்டு நேற்றைய கூட்டத்தில் ஏழுபேர் கூட்டத்தைக் கேட்டதாக சொன்னார். எனக்கு பொதுவாக அந்தமாதிரி ஒழுகும் கூட்டத்தில் பேசி பழக்கமில்லை. அதோடு காலி நாற்காலிகள் என்றால் இன்னும் கைகால் உதறும், அவற்றில் காலஞ்சென்ற மூதாதையர் அமர்ந்திருப்பதுபோல ஒரு பிரமை.
ஆகவே நான் பேசுவதை வழக்கமாகக் கேட்கும் நண்பர்களை கோவைக்கு வரச்சொல்லியிருக்கிறேன். கட்டுச்சோற்றுடன் விருந்துக்குப்போன கதைதான்
Published on August 16, 2011 11:40