அன்புள்ள நவீன்
ஓர் ஆசிரியர் அதை புனைகதை என்று சொல்லிக் கொண்டாரென்றால் அதை பிறகு தன்வரலாறாகக் கொள்ளக்கூடாது. தன் வரலாற்று அம்சம் பெரும்பாலும் எல்லா புனைகதைகளிலும் இருக்கும். சில கதைகளில் அதிகம். அவற்றை தன்வரலாற்று நாவல் என்கிறோம்.
உதாரணமாக 'குழந்தைகள் ஆண்கள் பெண்கள்' [சுந்தர ராமசாமி] தன் வரலாற்று அம்சம் உள்ள நாவல். ஆனால் 'சிலுவைராஜ் சரித்திரம்' [ராஜ் கௌதமன்] தன்வரலாற்று நாவல்.
சில தன்வரலாற்று நாவல்களை பட்டியலிடுகிறேன்.
1. சுதந்திரதாகம் – சி.சு.செல்லப்பா
2. காதுகள் -எம்.வி.வெங்கட்ராம்
3. தேரோடும் வீதி- நீலபத்மநாபன்
4.உறவுகள் -நீல பத்மநாபன்
5 சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ்கௌதமன்
6. கருக்கு -பாமா
7. புதியதோர் உலகம்- கோவிந்தன்.
8. நிலாக்கள்தூர தூரமாய் – பாரததேவி
9. நிறங்களின் உலகம்- தேனி சீருடையான்
10. உண்மைகலந்த நாட்குறிப்புகள் -அ.முத்துலிங்கம்
ஜெ
Published on August 09, 2011 11:30