யானை டாக்டர் இலவச நூல் வினியோகம்

ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் சிறுகதை இயற்கை குறித்தும் , வன உயிர்கள் குறித்துமான அக்கறையையும் கவனத்தையும் கோருகிறது , டாக்டர் கிருஷ்ணமூர்த்தி எனும் மகத்தான மனிதரை உலகிற்கு சரியான பார்வையில் அறிமுகப்படுத்துகிறது .


இந்த கதை சமூகத்திற்கு பரவாலாக போய் சேர்வதன் மூலம் வன உயிர்கள் குறித்தான விழிப்புணர்வு உண்டாகும் என்ற நோக்கில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் யானை டாக்டர் சிறுகதையை 40 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகமாக அச்சிட்டு இலவசமாக வினியோகிக்கிறோம் , முதல்கட்டமாக 6000 பிரதிகள் (பிரதிக்கு ரூ.மூன்று செலவானது) அச்சிட்டுள்ளோம்.மொழிபெயர்ப்பை ஆங்கிலத்திலும் அச்சடிக்க உள்ளோம் .


கல்லூரிகள் , நிறுவனங்கள் , சூழல் ஆர்வலர்கள் ,வனகாப்பகங்களுக்கு இந்த பிரதி அளிக்கப்படவேண்டுமென விரும்புகிறோம் , எங்களிடமுள்ள பிரதிகளை சரியான இடத்திற்கு உங்களால் கொண்டுசேர்க்க இயலுமானால் எங்களிடமிருந்து பெற்று வினியோகிக்கலாம் நண்பர்களே .


இந்த கதையை பொறுத்தவரை திறந்த காப்புரிமை வழங்கப்படுகிறது , யார் வேண்டுமாயினும் சுருக்காமல் , வெட்டி ஒட்டாமல் அச்சிட்டு வழங்கலாம் (ஒரு மின்னஞ்சலில் அறியப்படுத்தினால் போதுமானது),அச்சடிக்க விரும்புவோர் 94421 10123 , vishnupuram.vattam@gmail.com தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.


இந்த நூலை வினியோகிக்க விரும்பும் நண்பர்கள் உங்கள் முகவரி விவரங்களை இங்கே நிரப்புங்கள் , பிரதிகளை அனுப்பி வைக்கிறோம் ,


இந்த பிரதிகள் மறுஅச்சிட செலவை பகிர்ந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் தொடர்புகொள்ளலாம்.


மேலும் http://vishnupuram.wordpress.com/2011/07/06/123/


 


 


https://spreadsheets.google.com/spreadsheet/embeddedform?formkey=dHJlVnBFVGtpYWV1SDhKZTBKak9lc3c6MQ" frameborder="0″ marginwidth="0″ marginheight="0″ width="455″ height="1243″>

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 09, 2011 01:23
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.