எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2

HS_Shivaprakash


 


இத்தருணங்கள் அழியாமல்


இருக்க வேண்டும் ….


 


அழியாமல் இருக்க வேண்டும்


இத்தருணங்கள்


குன்றின் உச்சியில்


மைல் நீளஇறக்கைபோல் மேகமிருந்தாலும்


சிலைபோல இருக்கும் பாறைகள்


நீலம் பச்சை நடுவில்


ஜோடி வானவில்கள்


ஜோடிக் குருவிகளே


வானைத் துளைத்து பாடிப்பறங்கள்


பறவை மொழியைக் கற்ற சாலமன்


இப்போது சக்ரவர்த்தி


அழியாமல் இருக்கட்டும் இத்தருணங்கள்


தாளமற்ற ஆட்டம்


மேளமற்ற பாட்டு


துடிக்கும் இதயம் சொல்கிறது


குன்றுக்கு காத்துள்ளது பிளக்கும் வெடிகள்


மேகத்துக்கு மின்னல் கத்தி


ஜோடி வானவில்களுக்கு மழையின் தாக்குதல்


வாட்டமறியாத வளத்தவறே


ஜோடிக்குருவிக் கூட்டங்களே


வானம் நோக்கித் தாவுங்கள்


தரையில் எங்கும் பரவுங்கள்


காற்றைப் போல


காலம் நிறம் கண்கள் இறகு


பொதிந்த காற்றைப் போல


அழியாமல் இருக்க வேண்டும்


தாளமற்ற ஆட்டம்


மேளமற்ற பாட்டு


ஒவ்வொரு நொடியும்


 


interview_shivaprakash


நீ இல்லையென்றால்



எனக்குத் தெரியும்

இத்தோட்டத்துப் பூக்கள் மலர்வது


நீ இல்லையென்று நிற்பதில்லை


 


ஒன்றன்பின் ஒன்றாக வண்ணத்துப் பூச்சிகள்


கணநேரம் பூக்களில் அமர்ந்து பறப்பதும்


நிற்பதில்லை


நீ இல்லையென்று


 


எனக்குத் தெரியும்


சந்தைக்குப் போகும் இத்தோட்டத்துப்பூக்கள்


நீ உள்ளாய் என மறுப்பதும் இல்லை


அல்லது


சாவென்னும் பூனை


வண்ணத்துப் பூச்சிகளை


தின்னவருவதும் தடைபடுவதில்லை


நீ உள்ளாய் என.


 


இதற்கு பின்னும்


காற்றுக்கு நறுமனம் கொடுக்கும் பூக்கள்


என் உயிராவதில்லை


வெளிச்சத்தில் சிதறிய பூவின் வர்ணம்


என் விழிகளை கவர்வதுமில்லை


சந்தைக்கே கிட்டாத ஒரு பூ


இவ்வுலகத்தில் எஞ்சுவதுமில்லை


 


இவை எல்லாவற்றிற்கும்


நீ இல்லையென்றால் அர்த்தமே இல்லை.


 

 index





நினைவு

முதலிரவுக்கு முன்பு ஐந்து ரோஜாக்களைப்


பறித்துச் சூடியது நினைவிலுள்ளதா


முதல் தழுவலில் உருகிய இன்பம்


கூந்தல் கருமைபோல் கரைந்தது


இப்பொழுது தலையை நிரைக்கும் நரை


கணவன் இறந்த தினம்


அழிந்தது குங்குமச் சந்திரன்


அதற்கப்புறம் பற்பல முறைகள்


வானத்தில் சந்திரன் வந்ததும் போனதும்


உலர்ந்த நெற்றிக்கோ குங்குமத்தின் நினைவில்லை


இறங்கி சரிந்த நரைமுடி போல


சிற்சில சமயங்களில் அதிகாலைப் பனி


அதிகாலைப் பனிபோல தெளிவற்ற நினைவு


மறதியோ காலக் கொம்பு.


****


தமிழில் : பாவண்ணன்


மதுரைக்காண்டம்


எச் எஸ் சிவப்பிரகாஷ்


எஸ் எஸ் சிவப்பிரகாஷின் மதுரைக்காண்டம்


எச் எஸ் சிவ்பப்பிரகாஷ் கவிதைகள்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2016 10:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.