அவள் முழுமையானவள். துயரற்றவள். அனைத்தையும் காண்பவள். கடந்து சென்றவள். அமைந்தவள். அவள் ராமன் மீது சினம் கொள்ளவில்லை என்பதே அவள் ராமனைக் கடந்து விடுகிறாள் என்பதற்கு மிகச் சிறந்த சான்று. இதற்குப் பிறகு அவள் கம்பனில் பேசவே இல்லை. மலர்ந்த முகத்துடன் அனைவருக்கும் அருள் புரியும் பேரரசியாக அவள் இருக்கிறாள். தருமனும் அவ்வாறே. தற்பிரிந்து அருள் புரி தருமம் அவ்வாறுதான் இருக்க முடியும்.
தற்பிரிந்து அருள்புரி தருமம் – அருணாச்சலம் மகராஜன் சொல்வளர்காடு குறித்து
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Published on November 23, 2016 10:32