வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 11

DSC_1017


 


பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,


வணக்கம்.


மதிப்பிற்குரிய இலக்கிய ஆளுமை வண்ணதாசன் அவர்களுக்கு ”விஷ்ணுபுரம்” விருது வழங்கப்படுவதை அறிந்து அவருடைய வாசகர்கள் அவரைக் கொண்டாடி எழுதும் கடிதங்களை தங்கள் தளத்தில் வெளியிட்டுவருவதை தினமும் படித்து மகிழ்ச்சி அடைகிறேன். நானும் அவரின் சில சிறு கதைகளை (தனுமை, நிலை, சமவெளி, போய்க்கொண்டிருப்பவள்…) வலைத்தளத்தில் சமீபத்தில்தான் படித்து ரசித்தேன்.எனக்கு மற்ற வாசகர்கள் போல் நுணுக்கமாக விமர்சித்து எழுத தெரியவில்லை. இருந்தாலும் இவரைப் போன்றவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்றுதான் படித்த பிறகு தோன்றுகிறது.


இப்போது எனது கேள்வி வண்ணதாசனின் படைப்புகள் பற்றி அல்ல, அவரின் வாசகர்கள் பற்றி. இவரின் சில வாசகர்கள் தங்கள் எழுத்துக்கள், நிலைப்பாடுகள் அவர்களுக்கு சற்றும் ஏற்புடையது அல்ல என்றாலும் வண்ணதாசனை விருதுக்கு தேர்ந்து எடுத்ததற்காக (மட்டும்தான்) தங்களையும் பாராட்டி இருக்கிறார்கள். இது எனக்கு சற்று விளங்காத புதிராக தெரிகிறது. இவ்வளவு மூர்க்கமாக தங்கள் எழுத்துக்களை இவரின் சில வாசகர்கள் நிராகரிப்பது ஏன் ?


அன்புடன்,


அ .சேஷகிரி.


*


அன்புள்ள சேஷகிரி


இலக்கியப்படைப்புகளில் இருவகையான ‘உள்ளடக்கங்கள்’ உண்டு. ஒன்று கருத்தியல் சார்ந்து வெளிப்படையாக நிற்பவை. இன்னொன்று, வடிவம் மற்றும் மொழியில் கரைந்திருக்கும் பார்வைக்கோணம். அதனடிப்படையில் சில எழுத்தாளர்களை அணுகுபவர்கள் வேறு சில எழுத்தாளர்களிடம் விலக்கமும் கொள்ளக்கூடும்.


வண்ணதாசனின் எழுத்தில் இருந்து இவ்வாசகர்கள் பெறும் ஏதோ ஒரு அம்சம் என் எழுத்துக்கு மாறானது என்று மட்டுமே பொருள். அப்படி எப்போதும் உலக இலக்கியத்தில் நிகழ்துகொண்டுதான் இருக்கிறது


ஜெயமோகன்


***


அன்புள்ள ஜெ


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுர விருது அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வந்துகொண்டே இருக்கும் கடிதங்களைப்பார்க்கிறேன். அவருக்கு இவ்வளவு அர்ப்பணவாசகர்கள் இருப்பது ஆச்சரியம் அளிக்கவில்லை. ஆனால் அவர்கள் இதையெல்லாம் எழுத ஒரு சந்தர்ப்பம் வாய்க்கவேண்டியிருக்கிறது என்பதுதான் ஆச்சரியம் வண்ணதாசனுக்கே இதெல்லாம் பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்குமென நினைக்கிறேன்


ஜெயராஜ்


***


அன்புள்ள ஜெ


விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடைய வாசகர்கள் எழுதும் கடிதங்களில் ஒரு விஷயத்தைக் கவனித்திருப்பீர்கள். அவர்கள் நீங்கள் சொல்லிய அவருடைய எதிர்மறையான கோணத்தை கவனிக்கவே இல்லை. அவர்கள் அவரை வாழ்க்கையின் மேல் நம்பிக்கையை ஏற்படுத்திய, நெகிழ்ச்சியூட்டிய எழுத்தாளாராக மட்டுமே வாசிக்கிறார்கள்


இந்த வெகுஜன வாசிப்பை எவராலும் மாற்றமுடியாது. அல்லது மக்கள் அவரை முழுக்க மறந்தபின்னர் மீண்டும் விமர்சகர்கள் புதிய வாசிப்பை உருவாக்கி எடுக்கவேண்டும். ஜெயகாந்தனை அக்னிப்பிரவேசம் வைத்துத்தான் வாசிப்பார்கள். எங்கோ யாரோ யாருக்காகவோ போன்ற அற்புதமான கதைகளை எவரும் வாசிக்கமாட்டார்கள். மறுபிறப்பு புதுமைப்பித்தனுக்கு நிகழ்ந்தது


சாரங்கன்


 


வண்ணதாசன் இணையதளம்


வண்ணதாசன் நூல்கள்


வண்ணதாசன் இணையப்பக்கம்


வண்ணதாசன் கதைகள்


வண்ணதாசன் கவிதைகள்


==========================


 


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது


வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3


வண்ணதாசன் கடிதங்கள் 4


 வண்ணதாசன் கடிதங்கள் 5


வண்ணதாசன் கடிதங்கள் 6


வண்ணதாசன் கடிதங்கள் 7


வண்ணதாசன் கடிதங்கள் 8


வண்ணதாசன் கடிதங்கள் 9


வண்ணதாசன் கடிதங்கள் 10


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 25, 2016 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.