ராமனின் நாடு
மணி ரத்னம் இயக்கத்தில் கல்கியின் பொன்னியின் செல்வனை ஒரு சினிமாவாக எடுக்கும் திட்டம் ஆறாண்டுகளுக்கு முன்பு உருவானது. நான் அதற்குத் திரைக்கதை எழுதினேன். ஆனால் தமிழகத்தின் எந்தக்கோயிலிலும் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை. கோயில்களின் சுற்றுச்சுவர்கள் அல்லாமல் தமிழகத்தில் தரைத்தளத்தில் அமைந்த பெரிய கோட்டைகள் இல்லை. வரைகலை இன்றைய வளர்ச்சி அடையாத அன்றைய சூழலில் செட் போட்டு எடுப்பதென்றால் ஐம்பதுகோடி வரை செலவாகுமென கணக்கிடப்பட்டது. ஆகவே திட்டம் கைவிடப்பட்டது.
அந்தத்திரைக்கதையை நான் கோதாவரியின் கரையில் பிரம்மாவரம் அருகே இருந்த எலமஞ்சலி லங்கா என்னும் ஊரில் ஒரு விருந்தினர் மாளிகையில் ஒருமாதகாலம் தங்கி எழுதினேன்.
அற்புதமான சூழல். எலமஞ்சலி ஒரு அழகிய சிற்றூர். வளையோடுவேய்ந்த நீளமான வீடுகள் நிரைவகுத்த சீரான தெருக்கள் கொண்டது. வறுமையோ குப்பைக்கூளமோ இல்லாத சூழல். வீடுகளுக்கு முன்பக்கமாகவே இரு வாசல்கள். ஒன்று ஆண்களுக்கு இன்னொன்று பெண்களுக்கு.
ஊருக்கு அப்பால் பிரம்மாண்டமான தென்னந்தோப்புகள். தென்னங்காடு என்றே சொல்லவேண்டும். நடுவே ஓடும் மண்சாலை இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று கோதாவரியை அடையும். கோதாவரிக்கரையின் ஓரமாக செம்படவர்களின் ஊர்கள். மண்ணாலான சுவர்கள் கொண்ட சிறிய வீடுகள். ஆனால் சுத்தமானவை. வாரந்தோறும் செம்மண்ணாலும் சுண்ணத்தாலும் கோலமிட்டு அவற்றை அழகுறச்செய்வார்கள்.
தென்னந்தோப்பு நடுவே இருந்தது நான் தங்கியிருந்த விருந்தினர் மாளிகை. பத்தடி உயரமான சிமிண்ட் தூண்களுக்குமேல் அது நின்றது. அதன் முகப்பு ஊரைநோக்கியிருந்தாலும் ,மறுபக்கம் மிகவிரிவான ஒரு உப்பரிகை கோதாவரியை நோக்கித்திறந்திருந்தது. அங்கிருந்து நோக்கினால் ஏறத்தாழ பத்து கிலோமீட்டர் அகலத்திற்கு கோதாவரி விரிந்து கிடக்கும்.
கோதாவரியின் மிக அதிகமான அகலம் அ%9
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

