யார் யாருக்காகப் பேசுகிறார்கள்?

DK_2586794fயார்


 


அரவிந்தன் எழுதிய ஒரு பழைய கட்டுரை கண்ணில்பட்டது. யார் யாரைப்புறக்கணிக்கிறார்கள். இலக்கியவாதிகள் திராவிட இயக்க எழுத்தாளர்களை புறக்கணிக்கிறார்கள் என்னும் வைரமுத்துவின் குற்றச்சாட்டுக்கான பதில் அது.


பலமுறை நான் எழுதிய வாதங்கள்தான். சிற்றிதழ் வாசகர்களுக்கு தெரிந்த சான்றுகள். ஆனால் பொதுவாசகர்களுக்கு அவை அவர்கள் அறியாத தகவல்கள். ஆணித்தரமான விளக்கம்.


சென்ற அரைநூற்றாண்டாக திராவிட இயக்கம் நவீன இலக்கியத்தைப்பற்றி மட்டும் அல்லாது நவீன ஆய்வுலகையே அறியாமல் இருந்திருக்கிறது. திராவிட சார்புள்ள ஆய்வாளர்களைக்கூட அது பொருட்படுத்தியதில்லை. அவர்களே அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கிறார்கள். ஆகவே புறக்கணிப்பு அவர்களுடையது.


நவீன எழுத்தாளர்கள் திராவிட இயக்கத்தைப் புறக்கணிக்கவில்லை, விமர்சித்து நிராகரித்தார்கள். அது அவர்களின் இலக்கியக்கொள்கை சார்ந்தது. அவ்விமர்சனம் விரிவாகவே எழுதப்பட்டும் உள்ளது.


நான் ஆர்வமாகப் படித்தது அதிலுள்ள பின்னூட்டம். அதில் ஒரு பின்னூட்டம்கூட மேலே இருந்த கட்டுரையை மிகமிக எளிய அளவிலேனும் புரிந்துகொண்டது அல்ல. சம்பந்தமே இல்லாத கருத்துக்கள். எதையாவது சொல்லிவைப்போமே என்பதுபோலச் சொல்லப்பட்டவை


ஆனால் அதைச் சொல்பவர்களின் தன்னம்பிக்கை அபாரம். ‘எழுத்தாளர்கள் இனியாவது கருத்தில்கொள்ளவேண்டும், செய்வார்களா?’ என எந்த மூக்கரையனும் சொல்லும் சூழல் இங்கெ உள்ளது. துன்பம்தான்.


சிலசமயங்களிலேனும் இங்கே கருத்துச்செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பதே வீணோ என எண்ணவைப்பவை தி ஹிண்டு, தினமலர் போன்றவை வெளியிடும் பின்னூட்டங்கள். ஆனால் இவ்வாறு எழுதுபவர்கள் தங்களை எங்காவது ஏற்கனவே பொருத்திக்கொண்டிருக்கும் மொண்ணைகள். புதியவாசகன் எங்கோ மௌனமாக வாசித்துக்கொண்டிருக்கிறான் என்று எண்ணிக்கொள்ளும்போது ஒரு நம்பிக்கை வருகிறது.

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 12, 2016 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.