Surendhiran Lakshmanan's Blog: Blog
April 28, 2022
Kaathugal – Book Review
ஒரு எழுத்தாளனின் காதுகளில் தொடர்ந்து கேட்கும் அமானுஷ்ய குரல்களினால் அவன் என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்கிறான் என்பதே கதை. இது உண்மை கதை என்று எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராமன் கூறுயிருக்கிறார். அது உண்மையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கிறது. தமிழில் இது போன்ற உளவியல் சார்ந்த புத்தகத்தை, நான் படிப்பது இதுவே முதல்முறை. சிலர் இதை மேஜிக்கல் ரியலிச வகைகளில் சேர்க்கின்றனர். சிலர் ஹாலிசினேசன் வகைகளில் சேர்க்கின்றனர். இது ஒரு மனநலம் சார்ந்த சிக்கல் என நான் புரிந்து கொள்கிறான். ஒரு சிறுகதை எழுது...
January 3, 2022
சிறுகதை பரிந்துரைகள் (ஜனவரி 2022)
ஜனவரி மாதத்திற்கான சிறுகதை பரிந்துரைகள்: (கீழே குறிப்பிட்டுள்ள சிறுகதைகள் ஒவ்வொன்றை பற்றிய உங்களுடைய கருத்துகள்/விமர்சனங்களை இங்கு ( https://bit.ly/3HzG0xv )குறிப்பிடவும். ஒரு குழுவாக அனைவரின் கருத்துகளையும் ஒன்றிணைப்பதே இதன் நோக்கம். கமெண்ட் செய்ய – இந்த லின்க்கை க்ளிக் செய்யவும் – Click Here ) (சிறப்பான கருத்துகள்/விமர்சனங்கள், தொடர் பங்களிப்புகள், அனைத்து சிறுகதைகளையும் படிப்பவர்கள் வாட்சப் குழு உரையாடல்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்) தம்பி (ஜெயமோகன்) உளவியலுக்கும், அமானுஷ்யமென நாம் கருதும...
December 16, 2021
Director Mysskin about Cinema
இயக்குனர் மிஷ்கின் அவர்களின் நேர்காணலை, கேள்வி பதில்களை தொகுத்து ‘வினாடிக்கு 24 பொய்கள் எனும் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். அந்த புத்தகம் தொடர்பான எனது புரிதல்கள் குறித்த காணொலி. About mysskin’s about his films & Cinema – 24 lies per second book – question and answer about cinema, books, movies, art, music, etc., . OVERVIEW: 0:07 – Introduction 0:19 – Intro 01:33 – Book Introduction 01:58 – For Assistant Directors 03:01 – About Screenplays 04:10 – Art & Music 05:28 – Screenplay Books 07:00 – Overa...
October 9, 2021
வெண்ணிற இரவுகள்
காதல் கதைகள் பெரும்பாலும் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. காதலர்கள் மாறலாமே தவிர, காதல் என்றுமே அப்படியேதான் இருக்கிறது. முதல் பார்வை, உரையாடல்கள், பரிமாற்றம், கருத்து வேறுபாடுகள், சிறு சண்டைகள், முதல் முத்தம், காமம், குடும்ப வாழ்வு, குழந்தைகள் என அதன் சாராம்சம் ஒன்றுதான். மனிதர்களும், சூழல்களுமே கதைகளை வித்யாசப்படுத்துகின்றன. சினிமாவில் நாம் பார்த்து வளர்ந்த காதல் கதைகள் வித்தியாசமாக எதையுமே சொல்லிவிடவில்லை. ’ஒருவனுக்கு ஒருத்தி’ போன்ற மனரீதியான ஒடுக்குமுறைகளை தாண்டி புதிதாக எதையும் காட்...
October 8, 2021
வினாடிக்கு 24 பொய்கள் – மிஷ்கின்
நீங்கள் ஏன் இயக்குனராக வேண்டும்? இயக்குனர் மிஷ்கினின் இந்த ஒரு புத்தகத்தை படித்துவிட்டு, உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த புத்தகம் கேள்வி-பதில் தொகுப்புதான். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு இயக்குனராக மிஷ்கினின் பதில்கள் பிரமிக்க வைக்கிறது. வெறுமனே, நானும் இயக்குனராக வேண்டும், புகழ் தேட வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டுமென ஆட்டு மந்தை கூட்டத்தில் ஐக்கியமாகி விடாமல், அவரின் தேடல் அவரின் மனம் சார்ந்து இருக்கிறது. ஒரு கதை ஏன் சொல்லப்பட வேண்டும்? அதற்கான அவசியம் என்ன? போன்ற புரிதல்களே இல்லா...
Matroru Manithan Book (மற்றொரு மனிதன் புத்தகம்)
அது வெளிக்காட்டப்படும் அளவும் இடமும் மாறுபடுமே தவிர, ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு சமூக விலங்கு தான். இந்த ஒரு புத்தகத்தில் ஒட்டுமொத்த மனித உளவியலையும் பேசிவிட முடியாதுதான். ஆனால், இச்சிறுகதைகளில் வரும் குறிப்பிட்ட சூழல்களில் வாழும் மனிதர்களின் மனங்களை, read more https://abiman.in/matroru_manithan/
October 5, 2021
Matroru Manithan Book (மற்றொரு மனிதன் புத்தகம்)
எனது முதல் புத்தகம், ஐந்து சிறுகதைகளின் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொகுப்பின் அனைத்து சிறுகதைகளிலும் பேசப்படுபவை உளவியல் ரீதியான சமூக குறைபாடுகளே தவிர, தனிமனிதனை நல்லவனா? கெட்டவனா? என தரம்பிரித்து பார்க்கும் முயற்சியில்ல.இந்த சிறுகதைகளில் வரும் கதாபாத்திரங்களின் தன்மைகள், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதோ ஒரு விதத்தில் உறங்கி கொண்டிருக்கும் ஆழ்மன வெளிப்பாடுகள் தான். அது வெளிக்காட்டப்படும் அளவும் இடமும் மாறுபடுமே தவிர, ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு சமூக விலங்கு தான். இந்த ஒரு புத்தகத்தில் ஒட்டுமொத...
வினாடிக்கு 24 பொய்கள் – மிஷ்கின்
இந்த புத்தகம் கேள்வி-பதில் தொகுப்புதான். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு இயக்குனராக மிஷ்கினின் பதில்கள் பிரமிக்க வைக்கிறது. வெறுமனே, நானும் இயக்குனராக வேண்டும், புகழ் தேட வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டுமென ஆட்டு மந்தை கூட்டத்தில் ஐக்கியமாகி விடாமல், read more... https://abiman.in/vinaadikku-24-poigal/
September 30, 2021
Gypsy – RajuMurugan
வாழ்க்கை முழுவதும் நாடோடிகளாக வாழ நிர்பந்தப்படுத்தப்பட்டவர்கள் சபிக்கப்பட்டவர்களே!… பயணங்கள் மனிதர்களை பக்குவப்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால், பயணப்பட நினைக்கும் மனங்கள் திரும்பி வந்துசேர ஒரு வீடோ நிலமோ நிச்சயம் இருக்கும் எனும் நம்பிக்கை தான் மகிழ்ச்சியை தருமே தவிர, நிராதரவை விடப்பட்ட மனங்கள் என்றும் நாடோடி தன்மையை விரும்புவதே இல்லை. நாடோடிகளாய் மாறிவிட நினைக்கும் மனிதர்களுக்கு தெரியும், அந்த வாழ்க்கை சிரமமென்றால், திரும்பவும் இயல்பு வாழ்க்கைக்கே வந்துவிடலாம் என்பது. ஆனால், நாடோடி குடும்பத்தி...
September 23, 2021
Kutramum Thandanyum Book Intro
இயக்குனர் மிஷ்கினின் நேர்காணல்கள் பலவற்றில், எனக்கு அறிமுகமான ஒரு பெயர் ’பியோதர் தஸ்தயெவ்ஸ்கி’. அவரின் படைப்புகளை படிக்க வேண்டுமென்ற பேரார்வம் நீண்ட நாட்களாக இருந்த போதும், படிக்காமல் காலம் தாழ்த்த ஒரே காரணம், பக்கங்களின் எண்ணிக்கை. ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்டு ஒரு நாவலை படிப்பதற்கு, நான்கைந்து வேறு புத்தகங்களை படித்து விடலாமென்ற ஒரு சோம்பேறித்தனம். ஆனால், குற்றமும் தண்டனையும் நாவலின் நூறு பக்கங்களை தாண்டும் பொழுதே தோன்றிய எண்ணம், “நாம் முதலில் படித்திருக்க வேண்டியது இவர்களை தான்”. ஒரு புத்தகத...


