கொற்கை Quotes

Rate this book
Clear rating
கொற்கை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள் (நகரங்கள்.) (Tamil Edition) கொற்கை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள் (நகரங்கள்.) by Robert Caldwell
40 ratings, 3.95 average rating, 2 reviews
கொற்கை Quotes Showing 1-4 of 4
“இறந்தவர்களை எரிக்கும் பழக்கமுடைய இந்தியாவில் , இந்த புதைக்கும் பழக்கம் உடைய மக்கள் எப்படி தோன்றி , எந்தச் சுவடும் இல்லாமல் மறைந்து போனார்கள் என்ற கேள்வி வருகிறது. இது சில நூறு வருடங்கள் மட்டுமே வயதுள்ள இடங்கள் எனில் , இந்தப் பழக்கத்தின் எச்சம் இன்னமும் இருந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாமல் போனதன் காரணம் என்னவாக இருக்கும் ? இது மட்டுமே இந்த இடங்கள் வரலாற்றுக்கு முந்தையவை என்பதை குறிக்கின்றன.”
இராபர்ட்டு கால்டுவெல், கொற்கை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள் (நகரங்கள்.)
“அதாவது லட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் இறப்பு என்பதை அறியாதவர்கள். அவர்கள் வயது ஆக ஆக சிறியதாகிக் கொண்டே போவார்கள். காலப்போக்கில் அவர்கள் மிகவும் சிறியதாகி விடுவதால் , வீட்டின் விளக்கு மாடத்தில் அவர்களை வைத்து விடுவார்களாம். அவர்களைப் பார்த்துக் கொள்வது பெரும் வேலையாக இருந்ததால் , இளம் வயதினர் , அவர்களை ஒரு பானையில் வைத்து , பாத்திரங்களில் அரிசி , நீர் , எண்ணெய் போன்றவற்றையும் வைத்து , ஊருக்கு வெளியே புதைத்து விடுவார்களாம்.”
இராபர்ட்டு கால்டுவெல், கொற்கை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள் (நகரங்கள்.)
“இன்றைய மன்னார் வளைகுடாவை , கிரேக்கர்கள் ' கொல்கி வளைகுடா ' என்று குறிப்பதில் இருந்து இது ஒரு பெரிய நகரமாக இருந்திருக்க வேண்டும் என்று தெரிந்துக் கொள்ளலாம். பண்டைய மரபுகள் குறிக்கும் , தென்னிந்திய நாகரீகத்தின் தொட்டிலான கொற்கை இதுவே என்று முடிவு செய்யலாம். இங்கிருந்துதான் , மூன்று  சேரன் , சோழன் மற்றும் பாண்டியர்கள் பிறந்து , வளர்ந்து , பின் தங்கள் பேரரசுகளையும் , வம்சங்களையும் உண்டாக்கினார்கள் எனலாம். இங்குதான் பாண்டியர்களின் ஆட்சி தொடங்கி , பின் மதுரைக்கு போனது என்றும் தெரிந்துக் கொள்ளலாம். கொற்கை என்பதன் அர்த்தம் ' ஒரு படை முகாம் ' என்பதாகும். இதே நேரத்தில் , இன்றைய கொற்கைக்கும் , கடலுக்கும் இடையே இருக்கும் பழைய காயல் என்ற இடமே , மார்கோ போலோ அவரது நூலில் கிழக்கிந்திய கடற்கரையின் முக்கிய துறைமுகமாக குறிக்கும் ' காயில் ' என்ற இடம் என்று நான் முடிவுக்கு வந்திருந்தேன்.”
இராபர்ட்டு கால்டுவெல், கொற்கை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள் (நகரங்கள்.)
“பல வருடங்களுக்கு முன் நான் கொற்கைக்கு சென்றிருக்கிறேன். அது ஒரு அவசரமான பயணமாக இருந்தாலும் , அங்கு நான் கண்டவையும் , கேள்விப்பட்டவையும் , இப்போது முக்கியத்துவம் இல்லாமல் இருக்கும் இந்தக் கொற்கையே ( கொள்கை என்ற தமிழ் வார்த்தையில் இருந்து மறுவியதாக இருக்கலாம் ) கிரேக்கர்களால் ' கொல்கி ' என்றழைக்கப்பட்ட துறைமுகமாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.”
இராபர்ட்டு கால்டுவெல், கொற்கை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள் (நகரங்கள்.)