அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள் Quotes

Rate this book
Clear rating
அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்: Adimaippaduththum Kulatheivangal (Tamil Edition) அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்: Adimaippaduththum Kulatheivangal by காட்டாறு காட்டாறு
16 ratings, 3.88 average rating, 1 review
அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள் Quotes Showing 1-6 of 6
“பல ஜாதிகள் ஒன்றாகக் கும்பிட்டால், அது குலதெய்வம் என்ற வரையறைக்குள் எப்படி வரும்? அப்படி இருந்தால் அது நாட்டார் தெய்வம் அல்லது பொதுத் தெய்வம் அல்லது கிராமதெய்வம் என்று கூறலாம்.”
காட்டாறு காட்டாறு, அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்: Adimaippaduththum Kulatheivangal
“இந்திரனின் மகள்களான பூரணை, புட்கலை இருவரையும் அய்யனார் திருமணம் செய்து கொண்டார் என்று கூறி அய்யனாருக்கு இருபுறமும் இரு மனைவியரின் சிலைகளையும் சேர்த்து வைத்து வழிபடும் பழக்கம் பலநூற்றாண்டுகளாக நம்மிடம் உள்ளது.”
காட்டாறு காட்டாறு, அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்: Adimaippaduththum Kulatheivangal
“பலஜாதியினர் ஒரே தெய்வத்தைக் கும்பிடும் கோவில்களும் உள்ளன. மதுரை முனியாண்டி, வத்தலக்குண்டு மூங்கிலணைக் காமாட்சி, சிறுவாச்சூர் மதுரகாளி, கோச்சடை சோனை முத்தையா இப்படிப் பல கோவில்களும் உண்டு. இவற்றிலும் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு வேலை என அந்தந்த ஜாதிக்கு மனுதர்மத்திலும் சமுதாயத்திலும் என்ன நிலை உள்ளதோ, அதே நிலையில், அதே படிநிலையில் வேலைகள் ஒதுக்கப்படுகின்றன”
காட்டாறு காட்டாறு, அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்: Adimaippaduththum Kulatheivangal
“12 ஆம் நூற்றாண்டிலும் அதற்குப்பிறகும், சுல்தான்கள் - முகலாயர்கள் ஆட்சிக் காலத்திலும் பார்ப்பனப் பண்பாட்டு எதிர்ப்புப் புரட்சி கிளம்பியது. நாமதேவர், திருலோச்சன், சத்னா, பேனி, இராமாநந்தர், பீபா, தன்னா, செயின், கபீர், இரவிதாசர், குருநானக், வள்ளலார், இராமாநுஜர் எனப் பலரும் ஆரியப் பார்ப்பனர்களுக்கு எதிராகவும், இந்து வேத, சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கு எதிராகவும் தீவிரமானப் பணிகளைச் செய்து வந்தனர். இவர்கள் பின்னால் இலட்சக்கணக்கான மக்களும் இருந்தனர். சில காலங்களில் அரசுகளும் ஒத்துழைப்புக் கொடுத்தன. அப்படி”
காட்டாறு காட்டாறு, அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்: Adimaippaduththum Kulatheivangal
“புத்தர் உட்பட அவர்களிடம் இருந்த சின்னச்சின்ன சறுக்கல்கள் பார்ப்பனியம் அவர்களை விழுங்குவதற்குக் காரணமாக இருந்தன.”
காட்டாறு காட்டாறு, அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்: Adimaippaduththum Kulatheivangal
“ஊர் - சேரி எனும் இரட்டைவாழ்விட முறையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ள இக்காலத்தில் அந்த இரட்டை வாழ்விடங்களை உறுதிப்படுத்தும் முயற்சிகளாக இந்தத் தனிக்கோவில்களும், குலதெய்வ வழிபாடுகளும் முன்னிற்கின்றன.”
காட்டாறு காட்டாறு, அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்: Adimaippaduththum Kulatheivangal