Ananda vikatan pokkisham Quotes
Ananda vikatan pokkisham
by
vikatan publication40 ratings, 4.30 average rating, 4 reviews
Ananda vikatan pokkisham Quotes
Showing 1-13 of 13
“1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுதந்திரத்திற்காகப் பாடுபட, சுபாஷ் தலைமையில் ஒரு தொண்டர் படை நிறுவப்பட்டது. இதைக் கவனித்த பிரிட்டிஷ் சர்க்கார், அத்தொண்டர் படை சட்ட விரோதமானது எனக்கூறி, சுபாஷைக் கைது செய்து 6 மாத சிறைத் தண்டனை கொடுத்தது. தண்டனை அளித்த ஆங்கிலேய மாஜிஸ்டிரேட்டிடம் சுபாஷ், ‘‘ஆறு மாதத் தண்டனைதானா? இக்குறைந்த தண்டனை பெற நான் என்ன ஆடு, கோழியையா திருடினேன்?”
― Ananda vikatan pokkisham
― Ananda vikatan pokkisham
“டால்ஸ்டாய் எழுதிய ‘நாம் செய்வது என்ன?’ என்ற புத்தகத்தை நீ ஒரு முறை படிக்க வேண்டும்’’ என்று கூறினார். நான் அந்த நூலை வாங்கி ஆழ்ந்து, அழுந்திப் படித்தேன். அந்த நூல் பொன், பொருள், உலகம் என்ற பற்றைக் குறைத்துவிட்டது.”
― Ananda vikatan pokkisham
― Ananda vikatan pokkisham
“பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசியடங்குவதற்கு முன்கையை வாயைவிட்டு எடுத்துக் கொள்பவனும் நோய்வாய்ப்பட மாட்டான்”
― Ananda vikatan pokkisham
― Ananda vikatan pokkisham
“டால்ஸ்டாய், திருக்குறள் படித்தவர். ‘சுதந்திர இந்துஸ்தான்’ என்ற பத்திரிகையின் ஆசிரியருக்கு, 1908 டிசம்பர் மாதம் டால்ஸ்டாய் ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர் ஆறு திருக்குறள்களை மேற்கோள் காட்டினார். ‘இன்னா செய்தாரை ஒறுத்தல்...’, ‘பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின்’ ஆகிய குறள்கள் அவற்றில் அடங்கும். பரபரப்பூட்டிய அந்தக் கடிதத்தை மகாத்மா காந்தி ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் பிரசுரித்தார்.”
― Ananda vikatan pokkisham
― Ananda vikatan pokkisham
“எதிரிகளின் ராணுவம் ஒரு கிராமத்தையே வளைத்துக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்டுகளுக்கு அடைக்கலம் தந்திருந்த ஒரு தாய், தன் குழந்தையுடன் கம்யூனிஸ்ட் வீரர்களோடு சேர்ந்து தப்பிப் போய், ஒரு பாலத்திற்கு அடியில் ஒளித்திருக்கிறாள். தலைக்கு மேலே ஆயுதம் ஏந்திய ராணுவம் அணி வகுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. அப்போது அவளுடைய கைக் குழந்தை அழ ஆரம்பிக்கிறது. அந்தக் குழந்தை அழு கின்ற சத்தம் கேட்டால், அங்கே ஒளிந்து கொண்டிருக்கிறவர்கள் அத்தனை பேரையும் ராணுவம் சுட்டுக் கொன்றுவிடும். எனவே அந்தத் தாய், அழும் குழந்தையின் வாயை அழுத்தமாகக் கையால் பொத்துகிறாள். குழந்தையோ திமிறிக்கொண்டு மூக்கால் சிணுங்குகிறது. அப்போது மூக்கையும் அழுத்தி அடக்குகிறாள் தாய். எதிரியின் அணிவகுப்பு மிக நீளமாக முடிவற்றுப் போய்க்கொண்டிருக்கிறது. கையையும் காலையும் உதைத்துத் துடிதுடித்துக்கொண்டிருந்த குழந்தையின் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்குகிறது. கடைசியில் குழந்தையின் உயிர்த் துடிப்பு ஒரேயடியாக நிற்கும்போது, குழந்தையின் தாய் தன்னையும் அறியாமல் வீறிடப் பார்க்கிறாள். அருகில் இருந்த கணவன் அவள் வாயை அழுத்தப் பொத்துகிறான்”
― Ananda vikatan pokkisham
― Ananda vikatan pokkisham
“தங்க நிலவடிக்க தாஜ்மஹால் கண்ணடிக்க தமிழோடு இசைவந்து சங்கமித்தல் எந்நாளோ?”
― Ananda vikatan pokkisham
― Ananda vikatan pokkisham
“கர்னாடக இசையின் மர்மங்களை அழகு செய்த ஜி.ராமநாதன்; கர்னாடக இசையைப் பாமரனுக்கும் கொண்டு சேர்த்த கே.வி.மகாதேவன்; கர்னாடக இசையை நவீனப்படுத்திய விஸ்வநாதன் ராமமூர்த்தி; நாட்டுப்புற இசையை அந்த மண்ணின் குரலோடும் வாத்தியங்களோடும் குழைத்துக் கொடுத்த இளையராஜா;”
― Ananda vikatan pokkisham
― Ananda vikatan pokkisham
“அரசியல் குடிலர்கள்’ என்கிற தொடரை உருவாக்கித் தனது அரசியல் எதிரிகளை விமர்சித்தார். ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?’, ‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’ போன்ற இலக்கிய வாக்கியங்களை வலிமைமிகு அரசியல் ஆயுதங்களாகப் பேச்சிலும், எழுத்திலும் அவர் பயன்படுத்தினார்.”
― Ananda vikatan pokkisham
― Ananda vikatan pokkisham
“எதையும் தாங்கும் இதயம்’ என்று அவர் அடிக்கடி கையாண்ட வாசகம், ஆங்கிலப் பெருங்கவிஞன் பைரனிடமிருந்து எடுத்தாண்டது. ‘ஆளவந்தார்கள்’, ‘சாய்வு நாற்காலி அரசியல்வாதிகள்’, ‘அவர்கள் சிலர்; நாம் மிகப் பலர்’ போன்றவை ஆங்கிலத் தொடர் மொழிகளை அவர் தமிழ்ப்படுத்திக் கையாண்டதற்குச் சில உதாரணங்கள்.”
― Ananda vikatan pokkisham
― Ananda vikatan pokkisham
“காந்தியடிகள் வரவேற்புரைக்குப் பதில் சொல்லும்போது, தென்னாப்பிரிக்காவில் சென்னைவாசிகளான தமிழர்கள் செய்த தியாகங்களைத் தம்முடைய தியாகங்களுக்கும் மேலானவையென்று குறிப்பிட்டார். ‘17, 18 வயதுச் சிறுவர்களான நாகப்பனும் நாராயணசாமியும் எத்தனை கஷ்ட கஷ்டங்களையும், அவமானங்களையும் சுமந்து தாய்நாட்டின் கௌரவத்தைக்காப்பாற்ற முயன்றார்கள்!”
― Ananda vikatan pokkisham
― Ananda vikatan pokkisham
“இது குறித்துக்காந்தி யடிகளே ‘மாடர்ன் ரெவ்யூ’ என்ற கல்கத்தா மாசிகையில் ஆங்கிலத்தில் பின்வருமாறு தன் அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார்: ‘‘ட்ரான்ஸ்வால் கிளர்ச்சியில் தமிழர்கள் செய்த காரியத்தைப் போல் வேறு எந்த இந்திய ஜாதியும் செய்யவில்லை. ஆதலால், வேறு காரணம் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு என் திருப்தியை நன்கு உணர்த்த வாவது நான் அவர்களுடைய புத்தகங்களை ஊன்றிப் படிக்க வேண்டும். சென்ற மாதம் அவர்களுடைய பாஷையைக் கவனமாகப் படித்து வந்தேன். அதைப் படிக்கப் படிக்க அம் மொழியிலுள்ள அழகு அதிகமாகத் தெரிகிறது. நேர்த்தியான மொழி அது; அமுதம் போன்றது. தமிழர்களுக்கிடையே முன்னாளிலும் இந்நாளிலும் அநேக ஞானிகளும் நுண்ணறிவாளர்களும் இருந்திருக்கிறார்கள். இந்தியா முழுமையும் ஒரே ஜனாங்கமாக ஏற்படவேண்டுமானால், சென்னை மாகாணத்திற்கு வெளியில் உள்ளவர்களும் தமிழ் மொழியைத் தெரிந்து கொள்ளவேண்டும்.”
― Ananda vikatan pokkisham
― Ananda vikatan pokkisham
“தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பைப் போட்டால் அவ்வ ளவு நீரும் உப்பு நீராகிவிடுகிறது. எனினும், உப்பைக்காணவில்லை; தண்ணீரில் மறைந்துவிட்டது. மகாத்மாவின் மறைவும் இப்படித்தான் இருக்கிறது. இவர் மக்கள் மூலம் வாழ்கிறார். ஆகவே, மகாத்மாவின் மறைவு குறித்து நாம் துக்கப்படலாகாது;”
― Ananda vikatan pokkisham
― Ananda vikatan pokkisham
“உறுப்பறுந்து போனாலும் உள்ளம் கலங்கான்; இச் செருப்பறுந்து போனதற்கோ சிந்திப்பான் - நெருப்பை எதிர்ப்பதற்கும் அஞ்சாத எண்ணம் படைத்தாற் பின் கொதிக்குமிந்தத் தார் குளிர் நீர்.”
― Ananda vikatan pokkisham
― Ananda vikatan pokkisham
