Gangapuri Kavalan Part - 1 Quotes
Gangapuri Kavalan Part - 1
by
விக்கிரமன்32 ratings, 3.66 average rating, 0 reviews
Gangapuri Kavalan Part - 1 Quotes
Showing 1-1 of 1
“வீரம்மாள்,”அத்தை! கோயிலுக்குப் புறப்பட்டுவிட்டீர்களா?” என்று கேட்டாள் . “இந்த நகரத்தில் எவ்வளவு கோயில்கள் !நாள் ஒன்றுக்கு ஒரு கோயில் என்று வருடம் முழுவதும் போய்த் துதித்தாலும் நாள் போதாது. மாளிகைக்குச் சென்ற நீ எப்போது வருவாய் என்று எதிர்பார்த்து வாயில் திண்ணையிலேயே உட்கார்ந்திருந்தேன். தெருவிலுள்ளவர்கள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டார்கள். அரச பல்லக்கு வந்ததன் காரணத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். ”அடி., வீரம்மா! அவர்களுள் சிலர் சொல்வதைப் பார்த்தால் எனக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது அதே சமயம் பயமாகவும் இருக்கிறது” என்றாள் அத்தை. அத்தையின் மடியில் தலைவைத்துக் கொண்டு படுத்த வீரம்மாள் கேட்டாள்:” பயமாக இருக்கிறது என்று எதைக் கொண்டு சொல்கிறீர்கள்?” “இளவரசர் இராசேந்திர சோழ தேவருக்கு உன்மீது….” என்று சொல்ல வாயடுத்தவர் சற்று நிறுத்திக்கொண்டாள். “சொல்லுங்கள் அத்தை! வீதியிலுள்ளவர்கள் சொல்வதில் உண்மையும் இருக்கும்” என்று கூறி எழுந்து உட்கார்ந்தாள். பிறகு அவள் மாளிகைக்குச் சென்றதிலிருந்து திரும்பி வந்தவரையிலும் அங்கு நடந்தவற்றை விவரித்தாள். இளவரசர் நாயகிகளின் பொறாமைப் பேச்சையும் இளவரசர் மகளின் அன்பு வார்த்தைகளையும் ஒன்றுவிடாமல் சொன்னாள். “அத்தை! அம்மங்கையின் ஆதரவான பேச்சு இல்லாதிருந்தால் திரும்பவும் மூங்கில் துறைக்கே சென்றுவிட முடிவு செய்திருப்பேன்.”
― Gangapuri Kavalan Part - 1
― Gangapuri Kavalan Part - 1
