வெயிலோடு போய் [Veyilodu Poi] Quotes

Rate this book
Clear rating
வெயிலோடு போய் [Veyilodu Poi] வெயிலோடு போய் [Veyilodu Poi] by ச. தமிழ்ச்செல்வன்
16 ratings, 4.31 average rating, 2 reviews
வெயிலோடு போய் [Veyilodu Poi] Quotes Showing 1-1 of 1
“நாளைக்கு அய்யாகிட்ட சொல்லி அல்வா வாங்கித் திம்போம் அழுகாதே...” அல்வாவைச் சொன்னதும் ஒரு கணம் அழுகையை நிறுத்தினான். வயிற்றுக்கடுப்பு வந்து ரத்தமும் சலமுமாய் ஒரு தடவை போன போது இவனுக்கு அய்யா அல்வா வாங்கிக் கொடுத்தார். அந்த சுவையை கொஞ்சம் நினைத்துப் பார்த்தான். மிக்சர் வண்டிக்குள் அகலத்தட்டில் இருந்த அல்வா நினைவுக்கு வந்தது. தொடர்ந்து வண்டிக்காரனிடம் சற்றுமுன் தனியாக அகப்பட்டுக்கொண்டது நினைப்பில் வந்தது. அதை நினைத்ததும் மீண்டும் அழத்தொடங்கினான்.
“டேய்.. அழாதடா.. அழாதே.. இப்ப நான் அய்யாவுக்கு சோறு கொண்டுட்டுப் போவம்ல்ல.. அப்ப வரும்போது உனக்குத் திங்க எள்ளுப்புண்ணாக்கு கொண்டாரேன்... என்ன”
இதைச் சொன்னதும் மீண்டும் அழுகையை நிறுத்தினான். அல்வாவை நம்புவதைவிட புண்ணாக்கை நம்பலாம். இது நிச்சயம் கிடைக்கும். அண்ணனால் இதைக் கொண்டு வரமுடியும். ஆனால் உடனே அழுகையை நிறுத்தவா.. வேண்டாம். அம்மா வந்து சமாதானப்படுத்தட்டுமே. அவதானே அடிச்சா. மீண்டும் அழ ஆரம்பித்தான். ஆனால் சுருதி குறைந்திருந்தது.”
ச. தமிழ்ச்செல்வன், வெயிலோடு போய் [Veyilodu Poi]