சொல்முகம் Quotes

Rate this book
Clear rating
சொல்முகம் சொல்முகம் by Jeyamohan
34 ratings, 4.09 average rating, 1 review
சொல்முகம் Quotes Showing 1-1 of 1
“நவீனக்கவிதை நிலையற்றவனாகிய, சின்னஞ்சிறியவனாகிய, தனிமனிதனை எல்லா பிரம்மாண்டங்களுக்கும் முன்னால் நிறுத்தியது. ஆகவே அது துயரத்தையே அடையாளம் கண்டது. Angst என்று தத்துவம் குறிப்பிடும் மனநிலையே நவீனக்கவிதையில் எப்போதும் வெளிப்படுகிறது. அதைப் ’பறதி’ என்ற கலைச்சொல்லால் குறிப்பிடலாம். இருத்தலியல் பதற்றம் அது.

தமிழில் கவிதை எழுதிய எல்லா நல்ல கவிஞர்களிலும் வெளிப்படுவது அந்தத் துயரமே. ‘எனக்கு யாருமில்லை, நான்கூட’ [நகுலன்] என்றோ ‘ இருள் முனகும் பாதையிலே பிறந்திறந்து ஓடுவதோ நான்![பிரமிள்] என்றோ ‘சிலையை உடை என் சிலையை உடை, கடலோரம் காலடிச்சுவடு’ [பசுவய்யா] என்றோதான் அது தன்னை உணர்கிறது.”
Jeyamohan, சொல்முகம்