சஞ்சாரம் [Sancharam] Quotes
சஞ்சாரம் [Sancharam]
by
S. Ramakrishnan331 ratings, 4.15 average rating, 65 reviews
சஞ்சாரம் [Sancharam] Quotes
Showing 1-2 of 2
“வேம்பின் காற்று எங்கிருந்தோ மழையைக் கொண்டுவந்தது. வேம்புதான் அவர்களைக் காப்பாற்றியது.
வேப்பங்காற்றின் சிலுசிலுப்பால் மழை கரிசல் பூமியில் இறங்கியது. அந்த நன்றியை மறக்காமல் தானோ என்னவோ வேம்பில்லாத கரிசல் கிராமங்களேயில்லை. ஊருக்கு நூறு மரங்களுக்கும் மேலிருந்தன.
வேம்புதான் கரிசலின் அடையாளம். வேம்பில்லாத ஊர்களே இல்லை. வெக்கையில் அம்மை உடல் கொப்பளிக்கும் போது வேம்புதான் மருந்தாகிறது. வேம்பைத் தாய் என்று கருதினார்கள். வேம்பின் கொழுந்தைப் பிடுங்கி வாயிலிட்டு அதன் கசப்பை ருசித்து வளர்ந்தவர்கள் என்பதாலே வாழ்வின் கஷ்டங்களை, கசப்பான அனுபவங்களை அவர்கள் இயல்பாகவே ஏற்றுக் கொண்டார்கள்.”
― சஞ்சாரம் [Sancharam]
வேப்பங்காற்றின் சிலுசிலுப்பால் மழை கரிசல் பூமியில் இறங்கியது. அந்த நன்றியை மறக்காமல் தானோ என்னவோ வேம்பில்லாத கரிசல் கிராமங்களேயில்லை. ஊருக்கு நூறு மரங்களுக்கும் மேலிருந்தன.
வேம்புதான் கரிசலின் அடையாளம். வேம்பில்லாத ஊர்களே இல்லை. வெக்கையில் அம்மை உடல் கொப்பளிக்கும் போது வேம்புதான் மருந்தாகிறது. வேம்பைத் தாய் என்று கருதினார்கள். வேம்பின் கொழுந்தைப் பிடுங்கி வாயிலிட்டு அதன் கசப்பை ருசித்து வளர்ந்தவர்கள் என்பதாலே வாழ்வின் கஷ்டங்களை, கசப்பான அனுபவங்களை அவர்கள் இயல்பாகவே ஏற்றுக் கொண்டார்கள்.”
― சஞ்சாரம் [Sancharam]
“சிலசமயம் நாதஸ்வரம் இசைத்துக் கொண்டிருக்கும்போது அவனுக்கு ஈரவேஷ்டி காற்றில் உலர்வதுபோல மனது மெல்ல எடையற்றுப்போவதை உணர்ந்திருக்கிறான். சிலசமயம் குளத்தில் மூழ்கிச் சென்று தரைமண் எடுப்பதுபோல மூச்சுத் திணறச்செய்வதாக இருக்கும். சில நேரம் உடல் எங்கும் கண்கள் முளைத்துவிட்டது போலவும் தோன்றும்.
வாசிப்பில் ஆழ்ந்துவிட்டால் உடலே இல்லாமல் போய்விடுகிறது என்பதை பக்கிரி நன்றாக உணர்ந்து கொண்டிருந்தான். அந்த உணர்ச்சியை அடையும்போது ஏற்படும் ஆனந்தம் அளவில்லாதது. தன்னிடம் இருந்து வெளிப்படுவது வெறும் நாதமில்லை, அது ஒரு மணம், பூவிலிருந்து மணம் கசிவது போல மனிதர்களுக்குள்ளும் மணமிருக்கவே செய்கிறது, அதை மலரச் செய்வது, வாசனையைக் கமழவிடுவதுதான் இசையா?
ஒரு நாள் மோகனம் வாசித்துக் கொண்டிருக்கும்போது சட்டென மனதில் இறந்துபோன அம்மாவின் முகம் தோன்றி மறைவதை உணர்ந்தான். இவ்வளவு சந்தோசமான ராகத்தை வாசித்துக் கொண்டிருக்கையில் மனம் ஏன் என்றோ இறந்துபோய்விட்ட அம்மாவின் மீதான துயரத்தைப் பீறிடச் செய்கிறது. மனம் சந்தோஷத்தை முழுமையாக உணர்வதற்குத் துயரம் தேவையானது தானா. அவனுக்குப் புரியவில்லை. ஆனால் துக்கம் பாரம் ஏறுவதாகயிருந்தது.
அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவன் மோகனத்தில் சஞ்சாரம் பண்ணிக்கொண்டிருந்தான். தனது துக்கம் இசையின் வழியே கரைந்து கேட்பவர்களின் மனதை ஈரமாக்கியதை உணரந்தபடியே அவன் மோகனம் வாசித்து முடித்தான்.”
― சஞ்சாரம் [Sancharam]
வாசிப்பில் ஆழ்ந்துவிட்டால் உடலே இல்லாமல் போய்விடுகிறது என்பதை பக்கிரி நன்றாக உணர்ந்து கொண்டிருந்தான். அந்த உணர்ச்சியை அடையும்போது ஏற்படும் ஆனந்தம் அளவில்லாதது. தன்னிடம் இருந்து வெளிப்படுவது வெறும் நாதமில்லை, அது ஒரு மணம், பூவிலிருந்து மணம் கசிவது போல மனிதர்களுக்குள்ளும் மணமிருக்கவே செய்கிறது, அதை மலரச் செய்வது, வாசனையைக் கமழவிடுவதுதான் இசையா?
ஒரு நாள் மோகனம் வாசித்துக் கொண்டிருக்கும்போது சட்டென மனதில் இறந்துபோன அம்மாவின் முகம் தோன்றி மறைவதை உணர்ந்தான். இவ்வளவு சந்தோசமான ராகத்தை வாசித்துக் கொண்டிருக்கையில் மனம் ஏன் என்றோ இறந்துபோய்விட்ட அம்மாவின் மீதான துயரத்தைப் பீறிடச் செய்கிறது. மனம் சந்தோஷத்தை முழுமையாக உணர்வதற்குத் துயரம் தேவையானது தானா. அவனுக்குப் புரியவில்லை. ஆனால் துக்கம் பாரம் ஏறுவதாகயிருந்தது.
அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவன் மோகனத்தில் சஞ்சாரம் பண்ணிக்கொண்டிருந்தான். தனது துக்கம் இசையின் வழியே கரைந்து கேட்பவர்களின் மனதை ஈரமாக்கியதை உணரந்தபடியே அவன் மோகனம் வாசித்து முடித்தான்.”
― சஞ்சாரம் [Sancharam]
