எட்டுத் திக்கும் மதயானை Quotes

Rate this book
Clear rating
எட்டுத் திக்கும் மதயானை எட்டுத் திக்கும் மதயானை by Nanjil Nadan
139 ratings, 4.12 average rating, 14 reviews
எட்டுத் திக்கும் மதயானை Quotes Showing 1-9 of 9
“யார்க்கும் வேண்டாத சின்னஞ்சிறு சாம்பல் பூத்த ஊர்க்குருவியானாலும் அதுவும் ஒரு பறவைதான். பறவைக்குண்டான எல்லா மோகங்களும் கொண்டுள்ள பறவை.”
Nanjil Nadan, எட்டுத்திக்கும் மதயானை [Ettuthikkum Madhayaanai]
“அவரவர் வாசலை காற்றுப் புகாமல் நெருக்கி அடைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது சனங்கள். மனங்களைக் கூடக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துக் கொண்டு விடுவார்கள்.”
Nanjil Nadan, எட்டுத்திக்கும் மதயானை [Ettuthikkum Madhayaanai]
“எந்தச் சிவாலயமும் செய்த குற்றங்களைக் கரைக்க முடியாது. எல்லாம் ஆத்ம சமாதானம். அல்லது வேறு விதத்தில் சொன்னால் சுய ஏமாற்றுதல்.”
Nanjil Nadan, எட்டுத்திக்கும் மதயானை [Ettuthikkum Madhayaanai]
“, எந்தப் புற்றில் எந்தப் பாம்போ என்று. ஆனால் புற்றென்றிருந்தால் பாம்பென்றும் இருக்கும் போலும். காண்பதற்கு அருகிலிருப்பது போல் தோற்றம் தரும் உண்மை, உண்மையில் வெகு தூரத்தில் இருக்கிறது. எப்படிச் சொல்ல முடியும் வெளிப் பார்வையில் வைத்து? காவிக்குள்ளும் வெள்ளை அங்கிகளுக்குள்ளும் கயமை பயிராகிறது. வெள்ளைக் கோட்டுக்குள்ளும் வியாபாரிகள் இருக்கிறார்கள். கறுப்புக் கோட்டுக்குள்ளும் கமிஷன் ஏஜண்டுகள் இருக்கிறார்கள்.”
Nanjil Nadan, எட்டுத்திக்கும் மதயானை [Ettuthikkum Madhayaanai]
“கொலை இல்லாம மனுச வரலாறு கிடையாது தம்பி. மத வரலாறு கிடையாது. கீதையிலே கிருஷ்ணன் சொல்லல்லியா, 'கண்ணனே கொலை செய்கின்றான்'ணு - ஆதி மனிசனுக்கு அடுத்த சந்ததியிலேருந்து இது ஆரம்பிச்சாச்சு தம்பி...”
Nanjil Nadan, எட்டுத்திக்கும் மதயானை [Ettuthikkum Madhayaanai]
“வாழ்வில். உண்மையாக இருந்தால் மட்டும் போதாது, உண்மையாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளவும் வேண்டும். அடிக்கடி நிரூபித்துக் கொண்டும் இருக்க வேண்டும். நடமாடும் மனிதர்களும் படமாடும் மனிதர்களும்...”
Nanjil Nadan, எட்டுத்திக்கும் மதயானை [Ettuthikkum Madhayaanai]
“அணியும் ஆடைகள் நவீனமாக இருத்தல் வேண்டும். பேசும் மொழியில், தொனியில் கனவான் புலப்பட வேண்டும். கை நிறைய மோதிரங்கள் வேண்டும், பை நிறையக் காசுகள் வேண்டும். எல்லாப் பீ நாற்றத்தையும் போட்டுப் புதைக்கும் வாசனைப் பூச்சுக்கள், தெளிப்புக்கள் வேண்டும். மோசடிகள் மீதூர்ந்து போகும் வண்ண வாகனங்கள் வேண்டும். சூடு சுரணை, நல்லற வாசனைகள் எல்லாம் அற்றுப் போய், காசொன்றே குறியாக, பேய்த்தனமான ஓட்டத்திற்குத் தயாராக...”
Nanjil Nadan, எட்டுத்திக்கும் மதயானை [Ettuthikkum Madhayaanai]
“விலைப் பட்டியல்கள். யோக்கியமாக இருந்தால் கூட அவ்வளவு முக்கியமில்லை. யோக்கியமாகத் தென்படுதல் மிக முக்கியம். எதை விற்றேனும் காசு உண்டாக்கு. அது கூரிய எஃகு. எதையும் அறுக்கும். எதையும் உடைக்கும். எதையும் தாண்டிப் போகும். எல்லாப் புகழையும் பெருமையையும் கண்ணியத்தையும் தேடிக் கொண்டு வந்து சேர்க்கும். தோற்றுப் போனவனின் சித்தாந்தம். பத்தினிப் பெண்குறி பிரதேசம் போயிற்றாம். ஐம்பத்தாறு தேசத்து ஆண் குறிகளும் எதிர் நின்று அழைத்தனவாம். பொருள் செய்யப்பா... எத்தை விற்றும், எத்தைத் திருடியும், எவரை ஏய்த்தும்... எல்லாம் செய்.”
Nanjil Nadan, எட்டுத்திக்கும் மதயானை [Ettuthikkum Madhayaanai]