கடல்புரத்தில் Quotes

Rate this book
Clear rating
கடல்புரத்தில் கடல்புரத்தில் by Vannanilavan
342 ratings, 4.19 average rating, 56 reviews
கடல்புரத்தில் Quotes Showing 1-5 of 5
“மனிதர்களுக்கு அன்பு என்கிற பெரிய வஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. மனிதனை நெருங்குகிறதுக்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளவோ இழந்தாலும் பெறுகிறதற்கும் ஏதாவது இருந்துகொண்டேதான் இருக்கிறதென்று நினைக்கிறேன். ஸ்ரீ சுந்தர ராமசாமி சொன்னது மாதிரி, 'எதையாவது இழந்துதான் எதையாவது பெறுகிறோம்' என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப்படுகிறது.”
வண்ணநிலவன் Vannanilavan, கடல்புரத்தில்
“அந்தக் கடல் ரஞ்சியைப் போல, தரகனாரைப்போல, வாத்தியைப் போல் வெகு அபூர்வமானது. அது தன் எழுச்சி மிக்க அலைகளால் எல்லோருக்கும் தன்னுடைய ஆசீர்வாதத்தைச் சொல்லுகிறது. அந்த ஆரவாரத்தில் மகிழ்ச்சியைத் தவிர வேறு ஒன்றுமில்லை.”
வண்ணநிலவன், கடல்புரத்தில்
“ஸ்நேகிதம் என்றால் அது அவ்வளவு பெரியது. அதற்கு வயசு என்ற ஒன்று உண்டா என்ன?”
வண்ணநிலவன், கடல்புரத்தில்
“கடலிலிருந்து கூட்டங்கூட்டமாக மேகங்கள் மேற்கே சென்றுகொண்டிருந்தன. யாரோ எய்த வர்ண அம்பைப் போல வானவில் மேகங்களைக் கிழித்துப் புறப்பட்டிருந்தது.”
வண்ணநிலவன், கடல்புரத்தில்
“கடல் இரைச்சல் 'சோ'வென்று மழை பெய்கிறது மாதிரி கேட்டுக்கொண்டிருந்தது. அந்தச் சத்தத்திலேதான் பிறந்தார்கள்; வளர்ந்தார்கள்; செத்துப்போனார்கள். கடல் அம்மை அவர்கள் வழிபடுகிற மரியாளுக்கும் சேசுவுக்கும் சமம்”
வண்ணநிலவன், கடல்புரத்தில்