புனைவு என்னும் புதிர் Quotes
புனைவு என்னும் புதிர்: உலகச் சிறுகதைகள் - 1
by
விமலாதித்த மாமல்லன் Vimaladhitha Maamallan3 ratings, 4.33 average rating, 0 reviews
புனைவு என்னும் புதிர் Quotes
Showing 1-1 of 1
“எல்லோருமே திருடர்களாக இருந்த ஒரு நாடு இருந்தது. இரவில் ஒவ்வொருவரும் எல்லாப் பூட்டுகளுக்கும் பொருந்தும் சாவிகளோடும் ஒளி மட்டுப்படுத்தப்பட்ட லாந்தர்களோடும் வீட்டைவிட்டுக் கிளம்பிப்போய் அண்டை வீட்டுக்காரர் ஒருவரின் வீட்டில் புகுந்து திருடுவார்கள். திருடியதை மூட்டை கட்டிக்கொண்டு விடியற்காலையில் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்புவார்கள்; வந்து பார்க்கும்போது தங்களுடைய வீடு கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் காண்பார்கள். ஆகவே, எல்லோரும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்ந்தார்கள். யாருக்கும் எந்த இழப்பும் இல்லை; ஏனென்றால், ஒவ்வொரு நபரும் அடுத்தவரிடமிருந்து திருடினார்; அடுத்தவர் இன்னொருவரிடமிருந்து திருடினார்; இப்படியேபோய் கடைசி நபர் முதல் நபரிடம் திருடும்வரை சுழற்சி தொடரும். விற்பவரும் வாங்குபவரும் தவிர்க்கமுடியாத வகையில் ஒருவரையொருவர் ஏமாற்றும்விதமாகவே அங்கே வணிக நடவடிக்கைகள் இருந்தன. தன்னுடைய குடிமக்களிடமிருந்து திருடிய குற்ற அமைப்பாகவே அரசு இருந்தது; குடிமக்களும் தங்களுடைய பங்குங்கு அரசை ஏமாற்றுவதில் மட்டுமே குறியாக இருந்தார்கள். இப்படியாக வாழ்க்கை அங்கே பிரச்சினை இல்லாமல் போய்க்கொண்டிருந்தது.”
― புனைவு என்னும் புதிர்: உலகச் சிறுகதைகள் - 1
― புனைவு என்னும் புதிர்: உலகச் சிறுகதைகள் - 1
