Patrick Olivelle > Quotes > Quote > Premanand liked it
“பிந்தைய இந்திய அரசர்களின் 'கல்வெட்டியலார்ந்த பழக்கம்' என்று குறிப்பிடுவதோடு ஒப்பிட்டு அசோகக் கல்வெட்டுகள் எவ்வளவு தனித்துவமானவையாகவும் வழக்கத்துக்கு மாறானவையாகவும் இருக்கின்றன என்று ரிச்சர்ட் சாலமன் குறிப்பிடுகிறார். 'வடிவம், உள்ளடக்கம், தொனி, இவற்றில் அசோகக் கல்வெட்டுகளை ஒத்திருக்கக்கூடிய ஒன்றைக்கூட இந்தியக் கல்வெட்டுத் தொகுப்பு உலகில் நம்மால் காண முடியவில்லை.' மேலும், 'நன்மதி கூறும் பண்பைக் கொண்டிருக்கும் அரசுக் கல்வெட்டுகள் மிக அபூர்வமானவையாக இருக்கின்றன' என்றும் 'சொல்லப்போனால், இப்பண்பு அசோகக் கல்வெட்டுகளில் மட்டுமே காணக்கூடிய ஒன்றாக இருக்கிறது' என்றும் சாலமன் சேர்த்துக்கொள்கிறார்.
நான் மேலே சொல்ல முயன்றிருப்பதை சாலமன் கூற்று முன்மொழிவதாக இருக்கிறது. அதே சமயத்தில், அசோகரது தனித்துவத்துக்கான காரணத்தையும் முன்வைக்கிறது. அவரது கல்வெட்டுகள், அரசருடைய பெருமைகள், சாதனைகள் போன்று பொதுவான புகழுரை ஆவணங்களாக இல்லாமல், கல்லில் செதுக்கப்பட்ட கடிதங்களாகவும் நன்மதிகளாவும் இருக்கின்றன. இவை தார்மிக விஷயங்களோடு தொடர்புடைய நிதானமான அறிவுரைகளாக இருக்கின்றன; போர்கள் எவ்வளவு கொடூரமானவை என்று காட்டுவதற்கும், அவரது செயல்களுக்காக மன்னிப்புகோருவதற்கும், அவரது சந்ததியினர் அதிகாரத்தையும் பெருமையையும் நாடுவதற்கு பதிலாக தர்மத்தின் மூலமாக வெற்றிகொள்ள விழைய வேண்டும் என்று சொல்வதற்கும் கலிங்க வெற்றி குறித்த பதிப்பு காணப்படுகிறதே தவிர, அரசனின் வெற்றி அல்லது அதிகாரம் போன்றவை குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. இந்த எழுத்துக்களின் தனித்துவமான இயல்பு, இவற்றை வெறுமனே அரசாணைகளாகவும் புகழுரைகளாகவும் பார்க்காமல் தனித்த இலக்கிய வகையாகப் பார்க்க முயல்வதை நியாயப்படுத்துகிறது.”
― Ashoka: Portrait of a Philosopher King
நான் மேலே சொல்ல முயன்றிருப்பதை சாலமன் கூற்று முன்மொழிவதாக இருக்கிறது. அதே சமயத்தில், அசோகரது தனித்துவத்துக்கான காரணத்தையும் முன்வைக்கிறது. அவரது கல்வெட்டுகள், அரசருடைய பெருமைகள், சாதனைகள் போன்று பொதுவான புகழுரை ஆவணங்களாக இல்லாமல், கல்லில் செதுக்கப்பட்ட கடிதங்களாகவும் நன்மதிகளாவும் இருக்கின்றன. இவை தார்மிக விஷயங்களோடு தொடர்புடைய நிதானமான அறிவுரைகளாக இருக்கின்றன; போர்கள் எவ்வளவு கொடூரமானவை என்று காட்டுவதற்கும், அவரது செயல்களுக்காக மன்னிப்புகோருவதற்கும், அவரது சந்ததியினர் அதிகாரத்தையும் பெருமையையும் நாடுவதற்கு பதிலாக தர்மத்தின் மூலமாக வெற்றிகொள்ள விழைய வேண்டும் என்று சொல்வதற்கும் கலிங்க வெற்றி குறித்த பதிப்பு காணப்படுகிறதே தவிர, அரசனின் வெற்றி அல்லது அதிகாரம் போன்றவை குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. இந்த எழுத்துக்களின் தனித்துவமான இயல்பு, இவற்றை வெறுமனே அரசாணைகளாகவும் புகழுரைகளாகவும் பார்க்காமல் தனித்த இலக்கிய வகையாகப் பார்க்க முயல்வதை நியாயப்படுத்துகிறது.”
― Ashoka: Portrait of a Philosopher King
No comments have been added yet.
