Ajithan > Quotes > Quote > Shanmugam liked it

Ajithan
“நீ மட்டுமே இருக்கிறாய், எங்கும் இல்லாமல், ஏக்கத்தையும் தனிமையையும் நிறையச்செய்து புன்னகைக்கிறாய். விழியிழந்த குழந்தைகள் போல நாங்கள் அழுது கூக்குரலிடுகிறோம், சிலர் ஓசையின்றி தேம்புகிறோம். நிதம் வந்து அமுதூட்டுகிறாய், லயித்த கணம் மீண்டும் மறைகிறாய். கணம், யுகக்கணம். இந்தக் கணம் நான் நிறைவு பெறுகிறேன். போதும், என்னை அழைத்துச்செல். என் உடலை இந்த மண் உண்ணட்டும். மரத்தின் வேர்கள் உண்ணட்டும். என் உடலின் எச்சமாக இந்த மரத்தின் இலைகள் பாலை காற்றுடன் சிலிர்த்து பேசும். நான் நிறைவுறுகிறேன். இந்த இரவு, இந்த கணத்திற்காகவே இவ்வளவும்.”
Ajithan, மருபூமி [Maruboomi]

No comments have been added yet.