Ajithan > Quotes > Quote > Shanmugam liked it

Ajithan
“எத்தனை கோடி நட்சத்திரங்கள்? பால்வெளிகள், அவற்றிலெல்லாம் கண்ணுக்கு தெரியாமல் நிறைந்திருக்கும் கோடானு கோடி கிரகங்கள், அவற்றின் இரவுகளை ஒளிமயமாக்கும், சமுத்திரங்களை பொங்கி எழச் செய்யும் முடிவில்லா நிலவுகள். எல்லாம் அவன் மூச்சின் அருகாமையில் அதிர்ந்தன. சிறு குழந்தைகளை போல அவற்றின் மழலை மொழி காற்றில் எழுந்தது. உரு திரண்டு ஒரு மந்திரமாக ஆனதை போல. தீராத பசியுடன், வற்றாத தாகத்துடன் அவை உடல் நடுங்கின. அணைக்க முடியாத நெருப்பாக அவற்றினுள் கனன்றது யுகாயுகங்களின் பெரும் மோகம். எனக்கு முன் சென்ற அனந்த கோடி இரவுகள், இனிவரப்போகும் கணக்கில்லா இரவுகள், எல்லாம் ஒன்று கலந்து மாபெரும் இன்றாக. எல்லையில்லா இந்த இரவு, கண்முன்னே நான் காலத்தை கண்டேன். அகாலத்தில் சிறு துளியென விழுந்து தெறித்தது பிரபஞ்ச காலம். கணம் ஒவ்வொன்றும் முடிவில்லாது விரிந்தது. முன்னும் பின்னும் இல்லாத நிகழ் கணம். அணுவிலும் சிறிது, முடிவற்றது. காற்றில் எங்கும் ஏக்கமாக அது நிறைந்தது. தீராத காதல். காதலின் பித்து.”
Ajithan, மருபூமி [Maruboomi]

No comments have been added yet.